பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ
துபாய்: அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று, ஈரான் அதிபர் பேசியிருந்த நிலையில், தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் துபாய்க்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
உலகின் 2வது பரபரப்பான விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் இன்று காலை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதன் காரணமாக விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சில விமானங்கள் பின்னர் புறப்படத் தொடங்கினாலும், பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை உறுதிசெய்த பிறகே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

என்ன நடந்தது?
வெடிச் சத்தங்கள் கேட்ட உடனேயே, துபாய் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்ததாக அறிவித்தது. பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் இருந்து புறப்பட காத்திருந்த பயணிகள் சுரங்கப்பாதைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் இது குறித்து பேசிய பயணிகள், விமான நிலையத்தின் மீது வெடிச் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு வானத்தில் புகை மண்டலம் எழுந்ததாகவும் கூறினார். நகரம் முழுவதும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ட்ரோன் தாக்குதல்
எமிரேட்ஸ் விமான நிறுவனம், "துபாய்க்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தது. இந்த சம்பவத்தையடுத்து, துபாய் விமான நிலையத்திற்கு மேலே புகை எழுந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், அங்கே எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்ற செய்திகளை துபாய் அரசு முதலில் மறுத்தது. பின்னர் ஒப்புக்கொண்டது.
Another Iranian attack drone hit Dubai International Airport, barely missing Concourse A. pic.twitter.com/axvNdrXUFn
— OSINTtechnical (@Osinttechnical) March 7, 2026
விமான போக்குவரத்தில் சிக்கல்
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஃபிளைட்ரேடார்24 என்ற இணையதளம், துபாய் வான்வெளியில் மிகக் குறைவான விமானங்களையே காட்டியது. ஆனால், அதிகாரப்பூர்வ விமான நிலைய இணையதளம், பல விமானங்கள் வந்து செல்வதாக கூறியுள்ளத. விமான நிலையத்தில் சராசரியாக 60 முதல் 90 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் அந்த இணையதளம் தெரிவித்தது.
இந்தியாவுக்கு விமானங்கள்
துபாய், அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச விமான நிலையம், ஷார்ஜா விமான நிலையம், அக்ரோதிரி விமான நிலையம் மற்றும் ஃபூஜைரா சர்வதேச விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இங்கு இருந்து டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இந்தியர்கள் திரும்புவதற்கு வசதியாக மாற்று விமானச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
"குற்ற உணர்வு.. நைட் தூங்க முடியல.." ஏர் இந்தியா விபத்து! ஓராண்டிற்கு பிறகும் உயிர் பிழைத்தவர் கதறல் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்!












Click it and Unblock the Notifications