Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

துபாய்: அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று, ஈரான் அதிபர் பேசியிருந்த நிலையில், தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் துபாய்க்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

உலகின் 2வது பரபரப்பான விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் இன்று காலை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதன் காரணமாக விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சில விமானங்கள் பின்னர் புறப்படத் தொடங்கினாலும், பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை உறுதிசெய்த பிறகே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Dubai International Airport

என்ன நடந்தது?

வெடிச் சத்தங்கள் கேட்ட உடனேயே, துபாய் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்ததாக அறிவித்தது. பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் இருந்து புறப்பட காத்திருந்த பயணிகள் சுரங்கப்பாதைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் இது குறித்து பேசிய பயணிகள், விமான நிலையத்தின் மீது வெடிச் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு வானத்தில் புகை மண்டலம் எழுந்ததாகவும் கூறினார். நகரம் முழுவதும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

ட்ரோன் தாக்குதல்

எமிரேட்ஸ் விமான நிறுவனம், "துபாய்க்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தது. இந்த சம்பவத்தையடுத்து, துபாய் விமான நிலையத்திற்கு மேலே புகை எழுந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், அங்கே எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்ற செய்திகளை துபாய் அரசு முதலில் மறுத்தது. பின்னர் ஒப்புக்கொண்டது.

விமான போக்குவரத்தில் சிக்கல்

விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஃபிளைட்ரேடார்24 என்ற இணையதளம், துபாய் வான்வெளியில் மிகக் குறைவான விமானங்களையே காட்டியது. ஆனால், அதிகாரப்பூர்வ விமான நிலைய இணையதளம், பல விமானங்கள் வந்து செல்வதாக கூறியுள்ளத. விமான நிலையத்தில் சராசரியாக 60 முதல் 90 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் அந்த இணையதளம் தெரிவித்தது.

இந்தியாவுக்கு விமானங்கள்

துபாய், அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச விமான நிலையம், ஷார்ஜா விமான நிலையம், அக்ரோதிரி விமான நிலையம் மற்றும் ஃபூஜைரா சர்வதேச விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இங்கு இருந்து டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இந்தியர்கள் திரும்புவதற்கு வசதியாக மாற்று விமானச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+