பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ
துபாய்: அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று, ஈரான் அதிபர் பேசியிருந்த நிலையில், தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் துபாய்க்கு அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
உலகின் 2வது பரபரப்பான விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் இன்று காலை பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. இதன் காரணமாக விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. சில விமானங்கள் பின்னர் புறப்படத் தொடங்கினாலும், பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை உறுதிசெய்த பிறகே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

என்ன நடந்தது?
வெடிச் சத்தங்கள் கேட்ட உடனேயே, துபாய் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை ஆக்டிவேட் செய்ததாக அறிவித்தது. பாதுகாப்புக்காக விமான நிலையத்தில் இருந்து புறப்பட காத்திருந்த பயணிகள் சுரங்கப்பாதைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் இது குறித்து பேசிய பயணிகள், விமான நிலையத்தின் மீது வெடிச் சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு வானத்தில் புகை மண்டலம் எழுந்ததாகவும் கூறினார். நகரம் முழுவதும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ட்ரோன் தாக்குதல்
எமிரேட்ஸ் விமான நிறுவனம், "துபாய்க்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தது. இந்த சம்பவத்தையடுத்து, துபாய் விமான நிலையத்திற்கு மேலே புகை எழுந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், அங்கே எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்ற செய்திகளை துபாய் அரசு முதலில் மறுத்தது. பின்னர் ஒப்புக்கொண்டது.
Another Iranian attack drone hit Dubai International Airport, barely missing Concourse A. pic.twitter.com/axvNdrXUFn
— OSINTtechnical (@Osinttechnical) March 7, 2026
விமான போக்குவரத்தில் சிக்கல்
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஃபிளைட்ரேடார்24 என்ற இணையதளம், துபாய் வான்வெளியில் மிகக் குறைவான விமானங்களையே காட்டியது. ஆனால், அதிகாரப்பூர்வ விமான நிலைய இணையதளம், பல விமானங்கள் வந்து செல்வதாக கூறியுள்ளத. விமான நிலையத்தில் சராசரியாக 60 முதல் 90 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் அந்த இணையதளம் தெரிவித்தது.
இந்தியாவுக்கு விமானங்கள்
துபாய், அபுதாபியில் உள்ள சயீத் சர்வதேச விமான நிலையம், ஷார்ஜா விமான நிலையம், அக்ரோதிரி விமான நிலையம் மற்றும் ஃபூஜைரா சர்வதேச விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இங்கு இருந்து டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இந்தியர்கள் திரும்புவதற்கு வசதியாக மாற்று விமானச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்












Click it and Unblock the Notifications