ஜெயிச்சேயாகனும்.. பலம் வாய்ந்த ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நாளை மோதல்.. அணிக்குள் வருகிறார் 'சீனியர்?'
துபாய்: இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்த நிலையில் இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் பலம்வாய்ந்த ஆப்கானிஸ்தான் அணியுடன் நாளை மோத உள்ளது.
இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால் உடனடியாக இந்தியா திரும்புவதற்கு விமான டிக்கெட்டுகளை புக் செய்து விடலாம் என்ற அளவுக்கு மிக மிக முக்கியமான போட்டி இதுவாகும்.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தபோதிலும், இந்திய அணியின் அரைஇறுதி கனவு ஏறத்தாழ நொறுங்கி விட்டது. ஆனாலும் ஆப்கானிஸ்தான் அணியுடன் நாம் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து போன்ற அணிகளுடன் மோசமாக தோல்வி அடைந்தால் இந்திய அணி அரையிறுதிக்கு போக வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவுக்கு வாய்ப்பு என்ன
இந்தியாவும், நமீபியா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளுடன் நல்ல ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இது நிச்சயமாக நடக்கும். நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோசமாக தோற்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஒரு பக்கம் வேண்டிக்கொண்டு இருந்தாலும் கூட, சில ரசிகர்களோ, இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் தோற்று விடக் கூடாது என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கன் இதுவரை மோதிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அபாரம்
குரூப் 2 அணிகளில் அதிக ரன் ரேட் எடுத்து வைத்துள்ள அணி ஆப்கானிஸ்தான்தான். +3.097 என்ற அளவுக்கு ஆப்கானிஸ்தானின் நெட் ரன் ரேட் உள்ளது. ஆப்கன் அணி பாகிஸ்தானுடன் மட்டும்தான் தோல்வியை சந்தித்தது. அதுவும் கூட கடுமையான போராட்டத்திற்குப் பிறகுதான் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இந்தியா மோதிய 2 போட்டிகளிலும் ஈஸியாக தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணி ரன் ரேட் மைனஸ் 1.609 என்ற அளவில் மோசமாக இருக்கிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் 11 டீமில் கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

வருண் சக்கரவர்த்தி
மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி முதல் இரு போட்டிகளிலும் விக்கெட் எதையும் எடுக்கவில்லை. அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பெயர் பெற்றவர் என்பதால் இந்த போட்டிக்கு அழைத்து வரப்படுவார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை இந்தியா இரண்டு போட்டிகளிலும் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டும்தான் வீழ்த்தியுள்ளது. அந்த அளவுக்கு பந்துவீச்சாளர்கள் மோசமாக ஆடி வருகின்றனர்.

அஸ்வின் வருகை
எனவே அஸ்வின் அணிக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஆங்கில ஊடகங்கள் பலவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை விடவும் இந்திய அணிக்கு தான் மிகுந்த நெருக்கடி உள்ளது. ரஷித் கான், முகமது நபி உள்ளிட்ட மிகச்சிறந்த ஸ்பின்னர்கள் கொண்ட அணி ஆப்கானிஸ்தான் என்பதால் அதை வீழ்த்த வேண்டுமென்றால் 200 சதவீதம் அதிக திறமையோடு இந்திய அணி ஆட வேண்டி இருக்கும். நாளையாவது விடிவுகாலம் பிறக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications