துபாய் மீது கொடூர தாக்குதல்.. ஈரானை தாக்க இஸ்ரேல் – அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அமீரகம்? பின்னணி
துபாய்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது ராணுவ தாக்குதல்களை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி ஐக்கிய அரபு அமீரகம் பரபரப்பான விளக்கத்தை அளித்துள்ளது.
பிப்ரவரி 28 முதல் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இன்றும் தொடர்ந்து ஈரான் மீது போர் நடந்து வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.

அந்த வகையில் சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யூஏஇ) உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. மேலும் கணிசமான அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
யூஏஇ-யில் பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தை எடுத்து கொண்டால் அங்குள்ள அமெரிக்க தூதரகம், துபாய் விமான நிலையம், அபுதாபியில் உள்ள அல் தஃப்ரா விமானப்படை தளங்களில் ஈரான் தனது ஏவுகணை, டிரோன்கள் வழியாக தாக்குதல்கள் நடத்தி உள்ளது. மேலும் அபுதாபியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகமான ஜெபல் அலி துறைமுகம் புகழ்பெற்ற பர்ஜ் அல் அரப் ஹோட்டல் போன்ற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கு தயாராகும் யூஏஇ
துபாய் மற்றும் அபுதாபியில் மக்களின் வழக்கமான வாழ்க்கையை பாதித்துள்ளது. அச்சத்துடன் பொதுமக்கள் நடமாட வேண்டிய சூழல் நிலவி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் வசித்து வரும் நிலையில் அவர்கள் உயிர் பயத்தில் உள்ளனர். இதற்கிடையே தான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களில் ஈடுபட ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
யூஏஇ பரிசீலனை
குறிப்பாக, ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ''ஐக்கிய அரபு அமீரகம் மீது நடைபெறும் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த பதிலடி தாக்குதலுக்கு தேவையான நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் பரிசீலனை செய்து வருகிறது'' என்று கூறப்பட்டு இருந்தது.
ஈரானுக்கு பெரிய சிக்கல்
இது பரபரப்பை கிளப்பியது. ஏனென்றால் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலில் ஈரான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இப்போது ஐக்கிய அரபு அமீரகமும் சேர்ந்து தாக்கினால் ஈரான் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளும். குறிப்பாக ஈரான் மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இப்படியான சூழலில் தான் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
யூஏஇ தந்த விளக்கம்
இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் தனது அரசு செய்தி நிறுவனமான எமிரேட்ஸ் நியூஸ் ஏஜென்சி வழியாக அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளுித்துள்ளது. அதில், ''தொடர்ச்சியான ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக தனது தற்காப்பு நிலையில் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகம் கவனம் செலுத்துகிறது. பிற முடிவுகளை எடுக்கவில்லை.
தவறான தகவல்
ஏனென்றால் இந்தபோரில் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு தரப்பாக பங்கேற்கவில்லை. மேலும் நல்லுறவு, பதற்றம் தணிப்பு மற்றும் ஐநா சபையின் சாசனத்திற்கான உறுதிப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஈரான் மீதான எந்த தாக்குதல்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் தனது நிலம், கடல், வான்வெளியை பயன்படுத்த இதுவரை அனுமதிக்கவில்லை.
பத்திரிகைகள் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம். ஒரு தகவலை வெளியிடும் முன்பு அதுசார்ந்தவர்களிடம் விவரங்களை பெற வேண்டும்'' என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரானை பழிக்கு பழியாக தாக்குதல் நடத்தப்போவது இல்லை. ஈரான் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் விளக்கம் அளித்துள்ளது.
-
ஈரானை அடிச்சா இந்தியாவுக்கு வலிக்கும்.. ஒரே ஒரு நல்லது மட்டும் நடந்துருக்கு! இனிமேல் தான் சிக்கலே! -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஈரானை சல்லி சல்லியாக நொறுக்கிய அமெரிக்கா.. இஞ்ச் இஞ்சாக சால்லடை போட்ட இஸ்ரேல்! எத்தனை தாக்குதல்? -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
ஈரானை தாக்கட்டுமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் மூக்கை உடைத்து அனுப்பிய சவுதி ‘பிரின்ஸ்' -
TRP-க்காக போரை வைத்து பீதி செய்த நியூஸ் சேனல்கள்.. "பெரிய ஆப்பு" வைத்த மத்திய அரசு -
கடலில் தவித்த ஈரான் போர்க்கப்பல்.. அமெரிக்காவிடம் சிக்காமல் காப்பாற்றிய இந்தியா! பரபரப்பு சம்பவம் -
இப்படி ஏமாந்த இஸ்ரேல்! 3D ஓவியத்தை தாக்க.. பல கோடி செலவு.. சொதப்பிய நெதன்யாகு -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நடக்கப்போகும் சம்பவம்.. வார்னிங் கொடுத்த டிரம்ப்! ஈரான் கதை முடியப்போகுது -
அமெரிக்காவின் பாதுகாப்பு வேலைக்கு ஆகல! ஈரான் அதிரடி அட்டாக்! ஜோர்டான், சவுதி பாதுகாப்பு கேள்விக்குறி -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
பெட்ரோல் - டீசல் விலை உயரப்போகுது.. 6 ஆண்டுக்கு பின் புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய்! ஷாக் -
தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை.. மொத்தமாக அள்ளி செல்லலாம்.. துபாய் தரும் பெரிய ஆஃபர்















Click it and Unblock the Notifications