குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள்.. 21 பேர் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது குவைத் அரசு!
துபாய்: குவைத் நாட்டில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் முதற்கட்ட பட்டியலை குவைத் அரசு வெளியிட்டுள்ளது.
குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 53 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வந்துள்ளது. தீ விபத்திலிருந்து காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார்.
குவைத்தில் வசித்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்களின் உயிரைப் பறித்த குவைத் தீ விபத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்கை குவைத்துக்குச் சென்று அவர்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், கோர தீ விபத்தில் உயிரிழந்த 21 இந்தியர்களின் பெயர்களை குவைத் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்து போன தீ விபத்தில் இறந்த 21 பேரின் பெயர்களின் முதல் தொகுப்பை குவைத் அரசு வெளியிட்டுள்ளது. குவைத் அரசால் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, அடையாளம் காணப்பட்ட இறந்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. ஷிபு வர்கீஸ்
2. தாமஸ் ஜோசப்
3. பிரவீன் மாதவ் சிங்
4. ஷமீர்
5. லூகோஸ் வடக்கோட் உன்னுண்ணி
6. புனாஃப் ரிச்சர்ட் ராய் ஆனந்தா
7. கேலு பொன்மலேரி
8. ஸ்டீபன் ஆபிரகாம் சாபு
9. அனில் கிரி
10. முஹம்மது ஷெரீப்
11. சஜு வர்கீஸ்
12. துவரிகேஷ் பட்நாயக்
13. முரளீதரன் பி வி
14.. விஸ்வாஸ் கிருஷ்ணன்
15. அருண் பாபு
16. சாஜன் ஜார்ஜ்
17. ரஜ்னித் குண்டடுக்கம்
18. ரெய்மண்ட் மக்பாண்டே கஹோல்
19. இயேசு ஒலிவரோஸ் லோப்ஸ்
20 ஆகாஷ் சசிதரன் நாயர்
21. டெனி பேபி கருணாகரன்












Click it and Unblock the Notifications