குவைத் தீ விபத்தில் 53 பேர் பலி: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்- மருத்துவமனைகளில் 30 இந்தியர்கள்!
துபாய்: 53 பேரை பலி கொண்ட குவைத் தீ விபத்தில் பலியானோருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
குவைத்தின் மங்கஃப் நகரில் 6 மாடி கட்டிடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி மொத்த 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

குவைத் தீ விபத்து தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது எக்ஸ் பக்கத்தில், குவைத் தீ விபத்து தகவலால் அதிர்ச்சி அடைந்தேன். 40க்கும் அதிகமானோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். (இதன் பின்னர் பலி எண்ணிக்கை 53 ஆக அதிகரித்தது).

இதனிடையே குவைத்துக்காக இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வாதிகா, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். குவைத் மருத்துவமனைகளில் 30-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications