நாளை தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை.. ஈரோட்டில் தீவிரவாதிகளா? என்ஐஏ சோதனை.. 2 பேரிடம் விசாரணை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 2 பேரை பிடித்து சென்ற அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
Recommended Video
ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோட்டுக்கு நேற்று மாலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) போலீசாருடன் வந்தனர். அவர்கள் திடீரென்று ஒரு வீட்டில் நுழைந்தனர்.
அந்த வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரகசிய இடத்தில் 2 பேரிடம் விசாரணை
இந்த விசாரணை இரவு 11 மணி வரை நீடித்தது. அதன்பிறகு என்ஐஏ அதிகாரிகள் 2 பேரை வேறு இடத்துக்கு அழைத்து சென்றனர். தற்போது அவர்களை ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் மாணிக்கம்பாளையம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் இந்த சம்பவம் நேற்று ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல்
மேலும் இந்த சோதனையின்போது வீட்டில் இருந்த செல்போன், மடிக்கணினி, டைரி, சிம்கார்டு, வங்கி புத்தகம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை 2 நாள் பயணமாக தமிழகம் வரும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சோதனை ஏன்?
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது,‘‘கடந்த மாதம் 24ம் தேதி பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்குவைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றனர்.

தீவிரவாத அமைப்புடன் தொடர்பா?
மேலும் ஈரோட்டில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டதாக சந்தேகப்படும் நபர்கள் இருக்கலாம் என என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தான் என்ஐஏ அதிகாரிகள் ஈரோடு வந்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய பாதுகாப்புடன் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தற்போது நடந்த சோதனை தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications