ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திடீரென இரும்பு பட்டறையில் புகுந்த ஆர்பி உதயகுமார்.. ஆச்சரியமான மக்கள்!
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்காக இரும்படித்து ஆர்பி உதயகுமார் வாக்கு சேகரித்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அறிவித்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக ஆர்பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது திடீரென இரும்பு பட்டறைக்குள் புகுந்து, தொழிலாளர்களுடன் சேர்ந்து இரும்படித்து வாக்கு சேகரிப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அமமுக சார்பாக சிவ பிரசாந்த், தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்ட வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் தென்னரசு?
அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் இரு அணிகளின் சார்பாக ஒரே வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தரப்பு வேட்பாளருக்கான தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மெகா தேர்தல் பணிக்குழு
அதேபோல் அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்ட மெகா தேர்தல் பணிக்குழுவின் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே களப்பணியை தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பிரச்சார யுக்தியை அமைத்து வருகின்றனர்.

திண்ணை பிரச்சாரம்
வேட்பாளர் தேர்வில் தாமதமானாலும் பிரச்சாரத்தில் தாமதமாகிவிடக் கூடாது என்று அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மற்றொரு முயற்சியாக உழைக்கும் மக்கள் பணியாற்றும் இடங்களுக்கு சென்று அவர்களுடன் பணியாற்றி வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது.

இரும்படித்த ஆர்பி உதயகுமார்
அதன் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாக்கு சேகரித்த திடீரென அப்பகுதியில் இருந்த இரும்பு பட்டறைக்குள் புகுந்தார். அங்கிருந்த தொழிலாளரிடம் இருந்து சுத்தியலை வாங்கிய ஆர்பி உதயகுமார், இரும்படித்து தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இரும்படித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications