அவர் ஃபோட்டோ எப்படி இருக்கலாம்.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க! ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணித்த கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: துணை நிலை ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்து உள்ளார்.

டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு ஆம் ஆத்மிக்கு முழு அதிகாரம் இல்லை.

இதனால் பல நேரங்களில் டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் அங்குள்ள ஆம் ஆத்மி அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வரும்.

 டெல்லி

டெல்லி

இந்தச் சூழலில் மற்றொரு நிகழ்வாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் இருவரும் நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டனர். நிகழ்ச்சி மேடையில் இடம்ப பெற்றிருந்த போஸ்டரே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

 புறக்கணிப்பு

புறக்கணிப்பு

அனைத்து நிகழ்ச்சிகளையும் மத்திய அரசு அரசியலாக்க முயல்வதாக ஆம் ஆத்மி அமைச்சர் விமர்சித்துள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு முதலில் ரெடி செய்யப்பட்டு இருந்த பேனர் மற்றும் போஸ்டர்களில் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வரின் புகைப்படம் மட்டுமே இருந்தன. ஆனால், கடைசி நிமிடத்தில் அதை மாற்றப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் இடம்பெறும் வகையில் மேடையில் இருக்கும் பேனர்கள் மாற்றப்பட்டன.

அரசியல்

அரசியல்

டெல்லி அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. இதில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கோபால் ராய் கலந்து கொள்ள இருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் அவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டனர். இது தொடர்பாக கோபால் ராய் கூறுகையில், "பிரதமர் அலுவலகம் டெல்லி போலீசார் மூலம் நிகழ்ச்சியை ஆக்கிரமித்துவிட்டனர். கடைசி நேரத்தில் அவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தைப் பிரதமர் மோடியின் படத்தை வைத்துவிட்டனர்

 விமர்சனம்

விமர்சனம்

அந்த இடத்தில் எல்இடி ஸ்கிரீன்களை வைக்கத் தான் திட்டமிட்டு இருந்தோம். நிகழ்ச்சி தொடங்கிய பின்னர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களை ஒளிபரப்புவதே எங்கள் திட்டம். இருப்பினும், அவர்கள் கடைசி நேரத்தில் அந்த எல்இடி ஸ்கீரனை தூக்கிவிட்டு பேனரை வைத்துவிட்டனர். இது ஏற்க முடியாதது" என்று தெரிவித்தனர். டெல்லி அரசு பேனர் தொடர்பாக அனுப்பிய டிசைன்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாமலேயே இருந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

 விளக்கம்

விளக்கம்

நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் அரசியல்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை ஆளுநர் அலுவலக அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். டெல்லி அரசு தான் அப்பகுதியின் பாஜக எம்பியை நிகழ்ச்சிக்கு அழைக்காமல் அரசியல் செய்வதாகத் தெரிவித்து உள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அழைத்த போதிலும், வேண்டுமென்றே பாஜக எம்பியை அழைக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+