திமுக சிறுபான்மையினர் நல அணி வீக்! ஈரோடு கிழக்கில் சிதறும் ஓட்டுக்கள்? ஆளை இறக்கிய அமைச்சர் மஸ்தான்!
திமுக சிறுபான்மையினர் நல அணி பலவீனமாக இருக்கிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குவங்கி கணிசமாக உள்ள நிலையில் அதை அறுவடை செய்வதற்கு கூட்டணியில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களை சார்ந்திருக்கிறது திமுக தலைமை.
திமுகவிலேயே சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு என்று ஒரு சார்பு அணி இருந்தும் அந்த அணியின் நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு காரணம் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவில் மாநிலச் செயலாளர் பதவி காலியாக இருப்பதே. நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வேலை வாங்க ஆள் இல்லாததால் அணியின் செயல்பாடும் வீக் ஆகி வ்ருகிறது.
இதனிடையே திமுக சிறுபான்மையினர் நல அணியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஜே.எம்.பஷீர் பள்ளிவாசல் பள்ளிவாசலாக சென்று ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
ஜே.எம்.பஷீரை இப்படி களமிறக்கி திமுகவுக்கும் முஸ்லீம் ஜமாத்தினருக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் இஸ்லாமியர்களின் ஓட்டுவங்கி வெற்றி தோல்வியை தீர்மானம் செய்யக் கூடிய இடத்தில் உள்ளது. இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய அதிமுக தரப்பில் கூடுதல் உழைப்பு செலுத்தப்படுகிறது. அதிமுக சிறுபான்மை அணி நிர்வாகிள் முழு வீச்சில் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு இஸ்லாமிய மக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக தரப்பு
ஆனால் திமுக தரப்பிலோ திமுக சிறுபான்மை அணி நிர்வாகிகளை தேடி பிடிக்க வேண்டிய நிலை தான் உள்ளது. அதிமுகவுக்கு இணையாக திமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே இந்த குறையை மமக, தமுமுக, முஸ்லீம் லீக், உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளை வைத்து ஈடு செய்து வருகிறார்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள். திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநிலச் செயலாளர் டாக்டர் மஸ்தான் அண்மையில் காலமான நிலையில் அவர் வகித்து வந்த பதவி இன்னும் காலியாகவே உள்ளது.

அமைச்சர் மஸ்தான்
இதனிடையே சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஈரோட்டில் முழுக்க முழுக்க முகாமிட்டு ஜமாத் நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஜே.எம்.பஷீரை தனது சார்பில் களமிறக்கி அதிமுக சிறுபான்மையினர் அணிக்கு பதிலடி கொடுத்து வருகிறார். திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநிலச் செயலாளர் பதவிக்கு ஜே.எம். பஷீர் காய் நகர்த்தி வருவதை ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் ஒரு மாதத்துக்கு முன்பு கூறியிருந்தோம்.

முழுமையாக தங்கி
இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் அவரும் ஈரோட்டிலேயே முழுமையாக தங்கி அமைச்சர் மஸ்தானின் தேர்தல் பணிச்சுமையை குறைத்து வருகிறார். ஜே.எம்.பஷீரை பொறுத்தவரை அதிமுகவில் சிறுபான்மை நல அணியின் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்!












Click it and Unblock the Notifications