ஈரோடு இடைத்தேர்தல்.. எண்ணெய் தேய்த்தாலே மை அழிகிறதா? அதிமுக புகாருக்கு தேர்தல் அலுவலர் விளக்கம்
ஈரோடு கிழக்கில் மை அழிவதாக எழுந்த புகாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கில் வாக்களித்துச் சென்றவர்கள் விரலில் எண்ணெய் தேய்த்தாலே மை அழிவதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். தேர்தலுக்காக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு
இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல அதிமுகவில் இருந்து தென்னரசு போட்டியிடுகிறார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து மேனகா களமிறங்குகிறார். மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இந்த 77 பேரில் யார் தங்கள் தொகுதியின் பிரதிநிதியாக இருப்பார் என்பதைத் தேர்வு செய்ய மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

அதிமுகவினர் புகார்
இதற்கிடையே இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அதிமுக சார்பில் பரபர புகார் முன்வைக்கப்பட்டது. அதாவது பொதுவாகத் தேர்தலின் பொது வாக்களித்துவிட்டு வந்த நபர், மீண்டும் கள்ள ஓட்டுப் போடுவதைத் தடுக்க அவர்களின் விரல்களில் மை வைக்கப்படும். இந்த மையை அழிக்கவே முடியாது. சில நாட்கள் இந்த மை அப்படியே விரலில் தான் இருக்கும். அதன் பின்னரே அது மெல்ல அழியும். அந்தளவுக்கு வலிமையானதாக இருக்கும்.

விளக்கம்
இருப்பினும், இன்று காலை ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுப் போட்டவர்களுக்கு அடையாளமாக வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக புகாரை முன்வைத்தது. வாக்களித்துச் சென்றவர்கள் விரலில் எண்ணெய் தேய்த்தாலே மை அதிமுகவினர் அழிவதாகக் குற்றஞ்சாட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இன்று காலை 9 மணி வரை 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த புகார் குறித்தும் விளக்கமளித்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார்
செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், "ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. இப்போது வரை வாக்குப்பதிவில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஏதோ ஒரு சில இடங்களில் தேர்தலில் வைக்கப்படும் மை அழிவதாக எல்லாம் புகார் கூறியிருந்தனர். அதில் உண்மையில்லை. நானே வாக்களித்துவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறேன்.

பிரச்சினை இல்லை
மை எல்லாம் அழியவில்லை. நன்றாகத் தான் இருக்கிறேன்... மை விஷயத்தில் எந்தவொரு புகாரும் இல்லை. மை சரியாகவே இருக்கிறது.. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்படும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன... வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். ஆதார் கார்டுகளை எடுத்து வந்தாலும் வாக்களிக்கலாம். தேர்தல் அமைதியாக நடத்த அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications