சிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்
ஈரோடு: சிறுநீரகத்தை தானம் செய்தால் ரூ 3 கோடி என ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இன்றைய காலகட்டங்களில் உறுப்பு திருட்டு என்பது பரவலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரை தெரிவித்துள்ளார். அதில் தங்கள் மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் சிலர் ஈடுபடுகின்றனர்.

நிர்வாகம் புகார்
சிறுநீரகம் தானம் செய்தால் ரூ 3 கோடி பணம் கிடைக்கும் என எங்கள் மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டு மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

கும்பல்
இதற்கு பதிவு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என வாட்ஸ் ஆப் மூலம் அந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனையின் முகவரியை கொண்டு போலியாக பேஸ்புக் பக்கத்தையும் அந்த கும்பல் உருவாக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நிர்வாகம்
மருத்துவமனையின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய கும்பல் குறித்து அவர்கள் கொடுத்துள்ள ஈரோடு மருத்துவமனையின் தொலைபேசி எண்ணுக்கு ஒரு பெண் போன் செய்து விவரம் விசாரித்த போதுதான் இந்த மோசடி குறித்து மருத்துவமனைக்கு தெரியவந்தது.

தடுத்து நிறுத்த வேண்டும்
மேலும் பல அப்பாவி நபர்களிடம் இருந்து பணம் பறிக்கும் எண்ணத்துடன் நடைபெறும் இந்த உறுப்பு தானத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வீரப்பன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications