Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு எம்பி கணேச மூர்த்தி திடீர் தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ஷாக் காரணம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Erode MDMK MP Ganesha Moorthy attempted suicide after he consumed sulphas insecticide

அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் திடீரென்று ஈரோடு எம்பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வைகோவின் மதிமுகவை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவருக்கு வயது 77. ஈரோடு பெரியார் நகரில் வசித்து வருகிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு லோக்சபா தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கணேச மூர்த்தி மதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

5வது ஆண்டாக அவர் எம்பியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலையில் கணேச மூர்த்தி திடீரென்று ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் அவர் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி விசாரித்தபோது கணேச மூர்த்தி எம்பி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கணேச மூர்த்தி தற்போது ஈரோடு எம்பியாக உள்ளார்.

வரும் லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படும். மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை ஈரோடு தொகுதி மீண்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதிக்கு பதில் திருச்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கணேச மூர்த்திக்கு மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு ஈரோட்டில் திமுக வேட்பாளராக பிரகாஷ் அறிவிக்கப்பட்டார்.

இதனால் கணேச மூர்த்தி மனம் நொந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதிமுக தலைமையும் அவருக்கு சரியான மரியாதை அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்து இருந்துள்ளார்.

இந்நிலையில் தான் திடீரென்று இன்று காலையில் வீட்டில் Sulphas-யை தண்ணீருடன் சேர்த்து அவர் உட்கொண்டு மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் ஈரோடு மதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+