ஈரோடு எம்பி கணேச மூர்த்தி திடீர் தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ஷாக் காரணம்
ஈரோடு: ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் திடீரென்று ஈரோடு எம்பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வைகோவின் மதிமுகவை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவருக்கு வயது 77. ஈரோடு பெரியார் நகரில் வசித்து வருகிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு லோக்சபா தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கணேச மூர்த்தி மதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5வது ஆண்டாக அவர் எம்பியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலையில் கணேச மூர்த்தி திடீரென்று ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் அவர் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி விசாரித்தபோது கணேச மூர்த்தி எம்பி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கணேச மூர்த்தி தற்போது ஈரோடு எம்பியாக உள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படும். மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை ஈரோடு தொகுதி மீண்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதிக்கு பதில் திருச்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கணேச மூர்த்திக்கு மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு ஈரோட்டில் திமுக வேட்பாளராக பிரகாஷ் அறிவிக்கப்பட்டார்.
இதனால் கணேச மூர்த்தி மனம் நொந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதிமுக தலைமையும் அவருக்கு சரியான மரியாதை அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் திடீரென்று இன்று காலையில் வீட்டில் Sulphas-யை தண்ணீருடன் சேர்த்து அவர் உட்கொண்டு மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் ஈரோடு மதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications