ஈரோடு எம்பி கணேச மூர்த்தி திடீர் தற்கொலை முயற்சி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ஷாக் காரணம்
ஈரோடு: ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் திடீரென்று ஈரோடு எம்பி கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வைகோவின் மதிமுகவை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவருக்கு வயது 77. ஈரோடு பெரியார் நகரில் வசித்து வருகிறார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு லோக்சபா தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கணேச மூர்த்தி மதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5வது ஆண்டாக அவர் எம்பியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று காலையில் கணேச மூர்த்தி திடீரென்று ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் அவர் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி விசாரித்தபோது கணேச மூர்த்தி எம்பி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது கணேச மூர்த்தி தற்போது ஈரோடு எம்பியாக உள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படும். மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை ஈரோடு தொகுதி மீண்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதிக்கு பதில் திருச்சி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கணேச மூர்த்திக்கு மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதோடு ஈரோட்டில் திமுக வேட்பாளராக பிரகாஷ் அறிவிக்கப்பட்டார்.
இதனால் கணேச மூர்த்தி மனம் நொந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதிமுக தலைமையும் அவருக்கு சரியான மரியாதை அளிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்து இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் திடீரென்று இன்று காலையில் வீட்டில் Sulphas-யை தண்ணீருடன் சேர்த்து அவர் உட்கொண்டு மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் ஈரோடு மதிமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications