என் மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர ஆசைப்படுகிறேன்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருக்கம்!
மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்புவதாக இளங்கோவன் உருக்கம்
ஈரோடு: தனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்புவதாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருக்கம் தெரிவித்துள்ளார்.
தனது முந்தைய பேச்சுக்கள் சிலவற்றை வெட்டியும், ஒட்டியும் சிலர் திரித்து வெளியிட்டு வருவதாகவும் அதைப்பற்றி தாம் பொருட்படுத்தவில்லை எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.
பெரியார், ஈவிகே சம்பத், திருமகன் ஈவெரா என தனது தாத்தா, அப்பா, மகன் என மூன்று பேரும் ஈரோட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதுடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் களம் காண்கிறார்.

இஸ்லாமிய இயக்கங்கள்
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. என இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தமிமுன் அன்சாரியும் இன்று ஆதரவு தெரிவித்திருக்கிறார். இதனிடையே தாம் போட்டியிடுவது பற்றி உருக்கமுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது மகன் விட்டுச் சென்ற பணிகளை தொடர விரும்புவதாக அதன் காரணமாகவே ஈரோடு கிழக்கில் போட்டியிடுவதாகவும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

பெரியார் பேரன்
தனது தாத்தா பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும் , தனது அப்பா சம்பத் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தனது மகன் திருமகன் ஈவெரா சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து ஈரோட்டின் வளர்ச்சிக்கு எண்ணற்ற பணிகளை செய்திருப்பதாக தெரிவித்தார். இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நிச்சயம் தாம் தொடர்வேன் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வெட்டி ஒட்டி
இதனிடையே பல்வேறு அரசியல் சூழல்களில் தாம் பேசிய தனது முந்தைய பேச்சுக்கள் சிலவற்றை வெட்டியும், ஒட்டியும் சிலர் திரித்து வெளியிட்டு வருவதாகவும் அதைப்பற்றி தாம் பொருட்படுத்தவில்லை எனவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications