ஷாக்.. ஈரோடு அருகே இளைஞர் மீது ஆசீட் வீசிய இளம்பெண்.. ஆபத்து நிலையில் சிகிச்சை.. என்னாச்சு?
ஈரோடு பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசீட் வீசிவிட்டு ஓடினார். இதில் ஆபத்தான நிலையில் இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 26 வயது நிரம்பிய இளைஞர் மீது ஒருவர் ஆசீட் வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில் அந்த இளைஞரின் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான் காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்னளர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள வர்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று பெருந்துறையில் இருந்து வந்து கொண்டிருந்த கார்த்திக் மீது இளம்பெண் ஒருவர் ஆசீட் வீசிவிட்டு ஓடியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கார்த்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. காதல் பிரச்சனையில் தான் இந்த ஆசீட் வீச்சு சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் தற்போது கார்த்திக் சிகிச்சையில் உள்ளதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஆசீட் வீசிய பெண் யார்? இருவருக்கும் இடையே எந்த மாதிரியான பிரச்சனை ஏற்பட்டது? என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இதுபற்றி போலீசார் தற்போது விசாரிக்க தொடங்கி உள்ளனர். மேலும் பட்டபகலில் இளம்பெண் ஒருவர் இளைஞர் மீது ஆசீட் வீசிய சம்பவம் ஈரோட்டில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications