மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்கலாம்.. எப்படி?
ஈரோடு: மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் எப்படி தபால் வாக்கு அளிக்க முடியும் என்பது குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் தகுதியான அனைவரும் முறையாக வாக்களிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள், கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்களும் தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) வருகிற 24-ந் தேதிக்குள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் வீடுகள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று படிவம் '12 டி' வழங்க உள்ளனர். தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் ஓட்டுபோட வசதியாக முன்கூட்டியே செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். செல்போன் எண் குறிப்பிடாதவர்களுக்கு தபால் மூலமாக அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அதன்படி குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டுக்கு நேரில் வந்து அடையாளத்தை சரிபார்ப்பார்கள். வாக்காளரின் கையொப்பம் அல்லது கைரேகை பெற்ற பின்னர் ஓட்டு போடும் முறை குறித்து எடுத்துக்கூறி, வாக்குச்சீட்டு கொடுத்து ஓட்டுப்போடவைப்பார்கள். கண்பார்வையற்றவர், வாக்களிக்க இயலாத நிலையில் உள்ளவர்கள், மாற்று நபர் மூலம் வாக்களிக்க வைக்கப்படுவார்கள். அவரிடம் ரகசிய காப்பு உறுதி மொழி பெறப்படும்.
முதல் முறை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும்போது வாக்காளர் இல்லை என்றால், மீண்டும் ஒருமுறை நேரில் வந்து ஓட்டு போட வாய்ப்பு அளிப்பார்கள். அப்போதும் இல்லை என்றால் தபால் ஓட்டுபோட வாய்ப்பு அளிக்கப்படாது. மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் நகல் அளிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் சுகாதார அதிகாரியின் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும். இதுதொடர்பான விவரங்கள் தேவைப்படுபவர்கள் 0424 226766 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிக்கையில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறி உள்ளார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications