Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தபால் துறை அறிவித்த சர்வதேச கடிதம் எழுதும் போட்டி.. அறிய வேண்டியவை.. பரிசுகள் இவ்வளவா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தபால் துறை சார்பில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளதாகவும், இந்த போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் தபால் துறை அழைப்பு விடுத்துள்ளது.

கடிதம் எழுதுவது என்பது இப்போது அடியோடு குறைந்துவிட்டது. கடிதம் தான் மெயிலாக மாறியது. பின்னர் அது வாட்ஸ் அப் பதிவாக மாறி வருகிறது. ஒரு கடிதம் எப்படி இருக்க வேண்டும் . அதன் கையெழுத்து எவ்வளவு அழகாக இருக்க வேண்டும், சொல்ல வரும் விஷயம் எப்படி கோர்வையாக வர வேண்டும்,சொல்ல வந்த தகவலை தெளிவாக குறிப்பிடுவது எப்படி என கடிதம் எழுதுவதே மிக அழகான பயிற்சியாகும். ஒருவருக்கு நன்றாக கடிதம் எழுதத் தெரியும் என்றால், பல பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியும். பிரச்சனைகளை கையாள்வதற்கான பக்குவமும் கிடைக்கும் என்பதால் கடிதம் எழுதுவதை கண்டிப்பாக ஊக்குவிக்க வேண்டும்.

International letter writing competition announced by postal department: what to know?

இந்த சூழலில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளதாக தபால் துறை அழைப்பு விடுத்துள்ளது. ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகர பாபு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

தபால் துறை சார்பில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடக்கவுள்ளது. 9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 150 வயதில் உலகளாவிய தபால் தொழிற்சங்கம், 8 தலைமுறைக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறது. எதிர்கால தலைமுறையினருக்கு அவர்கள் மரபுரிமையாக இருக்கும் என்று நீங்கள் நம்பும் உலகத்தை பற்றி விளக்கி ஒரு கடிதம் எழுத வேண்டும். கடிதம், 800 வார்த்தைக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம்.

சர்க்கிள் அளவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு, ரூ.25 ஆயிரம், 2ம் இடத்துக்கு, ரூ.10 ஆயிரமும், 3ம் இடத்துக்கு, ரூ.5,000 ரூபாய், சான்றிதழ் வழங்கப்படும். தேசிய அளவிலான போட்டியில் முதல் 3 பரிசு பெறுவோருக்கு முறையே, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த கடிதங்கள் சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும்.

கடிதப் போட்டி பள்ளி அளவில் வரும், ஜனவரி 31க்குள் நடத்தி, அதில் சிறந்த கடிதங்களை விண்ணப்பத்துடன், ஒரு போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், தபால் கண்காணிப்பாளர் (எஸ்பிஓ), - ஈரோடு கோட்டம், ஈரோடு - 638001 என்ற முகவரிக்கு பிப்வரி 5க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். போட்டி நடக்கும் இடம், தேதி துறை சார்பில் பின்னர் அறிவிக்கப்படும். விவரங்களுக்கு இந்திய தபால் துறையின் www.indiapost.gov.in தளத்திலோ அல்லது ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தினை 0424-2258066 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+