சீமானுக்கு எதிராக துண்டறிக்கை.. ஈரோட்டில் நாதக - தபெதிக இடையே மோதல்.. என்ன நடந்தது?
ஈரோடு: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பரப்புரையின் போது தபெதிகவினர் சீமான் மற்றும் நாதகவிற்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்த போது மோதல் ஏற்பட்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேருக்கு நேர் மோதியுள்ளனர். திமுக தரப்பில் விசி சந்திரகுமாரும், நாதக தரப்பில் சீதாலட்சுமியும் வேட்பாளர்களாக போட்டியில் இருக்கின்றனர். நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், இரு தரப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இதனிடையே கடந்த ஒரு மாதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து கொச்சையாக விமர்சித்து வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பெரியாரிய ஆதரவு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் பெரியாரை விமர்சித்து பேசுவதை சீமான் தொடர்ந்து செய்து வந்தார்.
பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டிலேயே இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக விமர்சித்தார். வெங்காயம் என்றெல்லாம் விமர்சித்ததால், சீமான் மீது கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஏற்கனவே அவரை கண்டித்து பல்வேறு இயக்கங்களும் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டன.

இந்த நிலையில் ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரியாரை கடுமையாக விமர்சித்து வரும் சீமானை கண்டித்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் துண்டறிக்கையை விநியோகித்து வந்துள்ளனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி பன்னீர்செல்வம் பூங்கா அமைந்துள்ள தேவாலயத்தில் இருந்து வெளியில் வருவோரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் யார் துண்டறிக்கை கொடுப்பது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications