Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்லீப்பர் சீட்டில் வைத்து 13 வயது சிறுமியை சீரழித்த வேன் டிரைவர்.. பாய்ந்தது போக்சோ

13 வயது சிறுமியை கற்பழித்த வேன் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: 13 வயது சிறுமியை ஆம்னி பஸ்சின் சிலீப்பர் சீட்டில் வைத்து நாசம் செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. ஈரோட்டில் தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்ப்பவர்தான் விக்னேஷ், வயசு 19 ஆகிறது.

19 வயது என்றாலும், விக்னேஷூக்கு கல்யாணமாகிவிட்டது. 5 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. ஸ்கூலுக்கு வேனில் சிறுமி வரும்போதும், போகும்போதெல்லாம் நன்றாக சிரித்து சிரித்து பேசி பழகி வந்துள்ளார்.

சிறுமியின் செல்போன் நம்பரையும் வாங்கிவைத்து கொண்டார். பேஸ்புக், வாட்ஸ்அப் என ஒன்றுவிடாமல், எல்லாத்திலேயும் சிறுமியிடம் பேசி கொண்டே இருந்துள்ளார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இவ்வளவு பேசினாலும் தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை விக்னேஷ் சிறுமியிடம் மறைத்து விட்டார். ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடந்த 22ம் தேதி விக்னேஷ் கடத்தி சென்று விட்டார். சிறுமியை காணாததால் பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர் உடனடியாக அரச்சலூர் போலீசில் புகார் அளித்தனர்.

விக்னேஷ் கைது

விக்னேஷ் கைது

அதனடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இறுதியாக விக்னேஷ், திருப்பூர் மாவட்டத்தில் சிறுமியை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் திருப்பூருக்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்டதுடன் போலீசார் விக்னேஷையும் கைது செய்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

ஸ்லீப்பர் சீட்

ஸ்லீப்பர் சீட்

அப்போது நடத்திய விசாரணையில் விக்னேஷ் சொன்னதாவது: வேனில் தினமும் வரும் இந்த பெண்ணை எப்பவுமே ரொம்ப பிடிக்கும். அதனால்தான் சிரித்து பேசவே ஆரம்பித்தேன். என் பேச்சை நம்பி சிறுமி என் கூட வந்துவிடவும், ஈரோட்டில் இருந்து திருப்பூர் சென்ற ஒரு சொகுசு பஸ்ஸில் ஏறி கொண்டேன். பஸ்ஸில் ஸ்லீப்பர் சீட்டில் வைத்து சிறுமியை கற்பழித்தேன்" என்றார்.

உடந்தை

உடந்தை

இதையடுத்து பஸ்ஸில் நடந்தது குறித்து சிறுமியிடம் கேட்டு போலீசார் உறுதிபடுத்தி கொண்டனர். மேலும் இந்த பலாத்காரத்துக்கு, ரமேஷ் 22, மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரும் உடந்தையாக விக்னேஷூக்கு இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

17 வயது சிறுவன்

17 வயது சிறுவன்

இதனையடுத்து விக்னேஷை கடத்தல், போக்சோ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன், ரமேஷ் ஆகியோரை வேறு வேறு பிரிவில் கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+