ஸ்லீப்பர் சீட்டில் வைத்து 13 வயது சிறுமியை சீரழித்த வேன் டிரைவர்.. பாய்ந்தது போக்சோ
13 வயது சிறுமியை கற்பழித்த வேன் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு: 13 வயது சிறுமியை ஆம்னி பஸ்சின் சிலீப்பர் சீட்டில் வைத்து நாசம் செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. ஈரோட்டில் தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்ப்பவர்தான் விக்னேஷ், வயசு 19 ஆகிறது.
19 வயது என்றாலும், விக்னேஷூக்கு கல்யாணமாகிவிட்டது. 5 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. ஸ்கூலுக்கு வேனில் சிறுமி வரும்போதும், போகும்போதெல்லாம் நன்றாக சிரித்து சிரித்து பேசி பழகி வந்துள்ளார்.
சிறுமியின் செல்போன் நம்பரையும் வாங்கிவைத்து கொண்டார். பேஸ்புக், வாட்ஸ்அப் என ஒன்றுவிடாமல், எல்லாத்திலேயும் சிறுமியிடம் பேசி கொண்டே இருந்துள்ளார்.

போலீசில் புகார்
இவ்வளவு பேசினாலும் தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை விக்னேஷ் சிறுமியிடம் மறைத்து விட்டார். ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடந்த 22ம் தேதி விக்னேஷ் கடத்தி சென்று விட்டார். சிறுமியை காணாததால் பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர் உடனடியாக அரச்சலூர் போலீசில் புகார் அளித்தனர்.

விக்னேஷ் கைது
அதனடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இறுதியாக விக்னேஷ், திருப்பூர் மாவட்டத்தில் சிறுமியை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் திருப்பூருக்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்டதுடன் போலீசார் விக்னேஷையும் கைது செய்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

ஸ்லீப்பர் சீட்
அப்போது நடத்திய விசாரணையில் விக்னேஷ் சொன்னதாவது: வேனில் தினமும் வரும் இந்த பெண்ணை எப்பவுமே ரொம்ப பிடிக்கும். அதனால்தான் சிரித்து பேசவே ஆரம்பித்தேன். என் பேச்சை நம்பி சிறுமி என் கூட வந்துவிடவும், ஈரோட்டில் இருந்து திருப்பூர் சென்ற ஒரு சொகுசு பஸ்ஸில் ஏறி கொண்டேன். பஸ்ஸில் ஸ்லீப்பர் சீட்டில் வைத்து சிறுமியை கற்பழித்தேன்" என்றார்.

உடந்தை
இதையடுத்து பஸ்ஸில் நடந்தது குறித்து சிறுமியிடம் கேட்டு போலீசார் உறுதிபடுத்தி கொண்டனர். மேலும் இந்த பலாத்காரத்துக்கு, ரமேஷ் 22, மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரும் உடந்தையாக விக்னேஷூக்கு இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

17 வயது சிறுவன்
இதனையடுத்து விக்னேஷை கடத்தல், போக்சோ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன், ரமேஷ் ஆகியோரை வேறு வேறு பிரிவில் கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications