Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛திருமாவளவன் பிரதமராக வாய்ப்பிருக்கிறது’’.. காங்கிரஸில் இருந்து வந்த குரல்.. அப்போ ராகுல் காந்தி?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக திருமாவளவன் வர வாய்ப்பிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். அப்போது ராகுல் காந்தி? என கேள்வி கேட்கப்பட்டதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பதில் கவனம் பெற்றது.

7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. கடைசி மற்றும் 7 வது கட்ட லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது. 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

lok sabha election 2024 tirumavalavan evks elangovan congress india bloc 2024

இன்று தேர்தல் முடிவடைந்த பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என இலக்கு வைத்துள்ளது. அதேபோல் பாஜகவை வீழ்த்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி திட்டமிட்டுள்ளது.

இந்த தேர்தலில் பாஜக வென்றால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவி ஏற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை மையப்படுத்தி தான் தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் இன்னும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ ஈரோட்டில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛இந்தியா கூட்டணியை பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார். ‛இந்தியா' கூட்டணி வென்றால் 5 ஆண்டுக்கு 5 பிரதமர். ஸ்டாலினும் பிரதமராவார். ராகுல் காந்தி 5வது ஆண்டில் பிரதமராக்கப்படுவார் என கூறினார்.

இதற்கு திருமாவளவன் ‛இந்தியா' கூட்டணியில் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பதில் தவறில்லை. அதில் தனக்கு ஆட்சேபனை இல்லை. நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம்'' என தெரிவித்தார். திருமாவளவனின் இந்த பதில் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன், ‛‛அவர் (திருமாவளவன்) சொல்வது சரிதான். திருமாவளவன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர் கண்டிப்பாக ஜெயிக்க போகிறார். அவரும் பிரதமராக வர வாய்ப்பிருக்கிறது. 5 ஆண்டில் 5 பிரதமர் வந்தால் என்ன நஷ்டம் என நான் கேட்கிறேன். அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றனர்.

ஆனால் பிரதமர் ஆண்டுக்கு ஒருவர் என மாற்றப்படும் நிலை வராது. வந்தாலும் கூட பிரச்சனையில்லை. 10 ஆண்டுகளாக ஒருவரே பிரதமராக (மறைமுகமாக மோடியை குறிப்பிடுகிறார்) இருந்தாலும் கூட எந்த பிரயோஜனம் எதுவும் இல்லை. மோடியால் 10 ஆண்டில் என்ன பயன் உள்ளது. அந்த வகையில் ஓராண்டு பிரதமராக இருந்தாலும் ஏதாவது செய்தால் நல்லது தான்'' என்றார்.

அதன்பிறகு, ‛‛லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தான் மெஜாரிட்டி தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் அதிக இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. அப்படியென்றால் ஒருமித்த குரலுடன் ராகுல் காந்தியை பிரதமராக்கும் கருத்து ஏன் வரவில்லை'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன், ‛‛ராகுல் காந்தியை பிரதமராக்கும் வாய்ப்பு ஏன் இல்லை என்று சொல்கிறீர்கள். 5 ஆண்டுக்கு முன்பே ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னாரே. காங்கிரஸ்காரர்களான எங்களை பொறுத்தமட்டில் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு உற்ற துணையாக உள்ள முக ஸ்டாலினும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அது மட்டும் போதாது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரும் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் ‛இந்தியா' கூட்டணியில் ‛யார்' பிரதமர் என்பது தெரியும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+