ஈரோடு அந்தியூர் டாஸ்மாக் பாரின் பின்னால் நின்ற கார்.. உள்ளே திறந்து பார்த்து.. ஆடிப்போன போலீஸ்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை பாரில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாரின் பின்புறம் நின்றிருந்த கார் மற்றும் ஸ்கூட்டரில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது. இந்நிலையில் மதுபாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் பார் ஊழியர் கையும் களவுமாக கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, வெளியில் அதிக விலைக்கு விற்பது அவ்வப்போது சில பகுதிகளில் நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கும் விலையவிட 50 முதல் 100 ரூபாய் அதிகம் வைத்து, டாஸ்மாக் திறக்காத நேரங்களில் சிலர் விற்பனை செய்கிறார்கள்.

சில டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்கிறார்கள். சில டாஸ்மாக் கடைகளில் முக்கியமான சில பீர் வகைகள் இருப்பது. அதேநேரம் அங்குள்ள பார்களில் கூடுதலாக 20 ரூபாய் வைத்து கூலிங்காக விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பதாகவும் பல இடங்களில் புகார்கள் உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் டாஸ்மாக் பாரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை பாரில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பாரின் பின்புறம் நின்றிருந்த கார் மற்றும் ஸ்கூட்டரை சோதனை செய்தனர். 2 வாகனங்களிலும் 838 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 3 பேரை பிடிக்க முயன்றனர். அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டார்கள். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்டவர், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் உருவாடி பகுதியை சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியரான சிவக்குமார் (வயது 45) என்பதும், 3 பேரும் சேர்ந்து கோபி பகுதியில் உள்ள மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி அந்த பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 838 மதுபாட்டில்கள், ரூ.95 ஆயிரம், மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வெள்ளகுழி பகுதியை சேர்ந்த சிலம்பரசன், மதுரை மாவட்டத்தை சேர்ந்த மோசஸ் என்கிற மோகன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications