சத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ!
Recommended Video
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் கம்ப ஆட்டம் ஆடி அசத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோயிலில் கம்பம் நட்டு திருவிழா கொண்டாடுவது வழக்கம். சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டு கம்பம் திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது.

இதையடுத்து கடந்த 28ம் தேதி கம்பம் வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், மே 1ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோயிலின் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றிலும் தினமும் இரவில் கம்ப ஆட்டம் ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

மேள தாளத்திற்கேற்ப கம்ப ஆட்டம் நடனம் ஆடும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெரியவர்கள் சிறுவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு ஆடி மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கம்ப ஆட்டம் ஆடுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேள தாள இசைக்கேற்றபடி படி நடனம் ஆடி அசத்தினர்.

பெண்கள் கம்பம் ஆடுவதை அப்பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications