செல்பிக்காக பின்னாலேயே ஓடிவந்த கூட்டம்.. ஈரோட்டில் வேகவேகமாக புறப்பட்ட மேயர் பிரியா.. பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியாவிடம், செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டதால் அவர் வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியாவிடம், செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டனர். இதனால் அவர் வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பங்கேற்றிருந்த சென்னை மேயர் பிரியா புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட சென்னை மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார்.

வாக்கு சேகரிப்பு
சென்னை மேயர் பிரியா கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டிடியிடும் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் இளைஞர்கள், பொதுமக்கள் பலருக்கும் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அவருடன திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர். மேயர் பிரியா நேற்று டிரம்ஸ் வாசித்து விட்டு வாக்கு சேகரித்த வீடியோ வெளியாகி இருந்தது.

இளைஞர்கள் முயற்சி
இந்நிலையில் நேற்று தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரக் கூட்டத்தில் மேயர் பிரியாவும் கலந்து கொண்டார். பின்னர் பிரச்சாரம் முடிந்து மேயர் பிரியா அங்கிருந்து புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் நினைவில்லம்
இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட சென்னை மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக சமூக ஊடங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. இதனிடையே மேயர் பிரியா, பெரியாரின் நினைவு இல்ல்த்திற்கு சென்றார். அங்கு புகைப்படம் எடுத்த அவர், "மானமும் அறிவும் மனிதருக்கு அழகு - என்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த மண்ணில் அவரின் நினைவு இல்லத்திற்கு சென்று மகிழ்ந்தோம் என்று ட்வீட் போட்டிருக்கிறார்.

பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது பிரச்சாரம் களைகட்டியிருக்கும் நிலையில், திமுகவின் ஏராளமான அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வாக்களை கவரும் பிரச்சார உக்தியில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் தொகுதி வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications