இதய பாதிப்பு.. உயிருக்கு போராடும் 4 மாத குழந்தை.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம் - ப்ளீஸ் உதவுங்க
சென்னை: பிறந்து நான்கு மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ஆபத்தான இதய பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தை உயிர் பிழைக்க அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு என மருத்துவர்கள் கூறிவிட்டனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் அந்தக் குழந்தையின் பெற்றோரால் இதற்கான செலவுகளை ஏற்க முடியவில்லை. நீங்கள் மனது வைத்தால் இந்தக் குழந்தையை காப்பாற்ற முடியும்.
திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது மனைவி நிர்மலா. எலக்ட்ரீஷியனாக இருக்கும் தேவராஜனுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. தினமும் கிடைக்கும் கூலியை வைத்துதான் அவர்களின் குடும்பம் நடந்து வருகிறது. இந்நிலையில், தேவராஜன் - நிர்மலா தம்பதியருக்கு 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகி 7 ஆண்டுகள் கழித்து பிறந்ததால் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தனர். அந்தக் குழந்தைக்கு அவர்கள் சாய்ஷா எனப் பெயரிட்டனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

சாய்ஷா பிறந்து பல மணிநேரமாகியும் குழந்தையால் தாய்ப்பாலை குடிக்க முடியவில்லை. பிறகு புட்டிப்பாலை புகட்டிய போதும் குடிக்க முடியாமல் குழந்தை திணறியுள்ளது. இதையடுத்து, பிறந்து 4 நாட்களுக்கு பின்னர் குழந்தையை பரிசோதித்ததில் மிகத் தீவிரமான இதய பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். நாட்கள் செல்ல செல்ல, இதய பாதிப்பு குழந்தைக்கு அதிகமாகியுள்ளது. இதனால் பாலை கூட உறிஞ்ச முடியாத நிலைக்கு அந்தப் பச்சிளம் குழந்தை ஆளானது.

இந்நிலையில்தான், அவர்கள் அண்மையில் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் குழந்தையை காட்டியுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அந்தக் குழந்தைக்கு பல்வேறு இதய பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. இதனால் குழந்தையின் இதயத்துக்கு சரியாக ரத்தம் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தீர்க்க அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என மருத்துவர்கள் கூறிவிட்டனர். மிக நுணுக்கமாக செய்ய வேண்டிய இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் தேவராஜனால் அவ்வளவு பணத்தை புரட்டுவது சாத்தியம் இல்லாதது. இதனால் தங்கள் குழந்தையை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று தெரியாமல் தேவராஜன் - நிர்மலா தம்பதியர் தினமும் அழுது புலம்பி வருகிறார்கள். மேலும், தங்கள் நிலையை கருத்தில்கொண்டு தங்கள் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பணத்தை தருமாறு தேவராஜன் - நிர்மலா தம்பதியர் கோரி வருகிறார்கள். நீங்கள் நினைத்தால் குழந்தை சாய்ஷாவின் உயிரை காப்பாற்ற முடியும். உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த தொகையை நீங்கள் செலுத்தலாம். நீங்கள் கொடுக்கும் சிறு தொகையால், ஒரு குழந்தையின் வாழ்க்கையை திருப்பிக் கொடுக்க முடியும்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications