தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்னரே மக்கள் பிரச்சனைக்காக களத்தில் குதித்து கலக்கும் காங்., வேட்பாளர்
Recommended Video
குமரி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார் பிரபல தொழிலதிபர் வசந்தகுமார். தேர்தல் முடிவு வருவதற்கு இன்னும் 1 மாதம் உள்ள நிலையில், மக்கள் பிரச்சனைகளை களைய அவர் களமிறங்கியுள்ளது மக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது இதில் வள்ளவிளை, இணையம், புத்தன்துரை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் பாதிப்படைந்தன இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர்களில் ஒருவரும் காங்கிரஸ் வேட்பாளருமான ஹச். வசந்த குமார்
எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு இயற்க்கை சீற்ற காலங்களிலும் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர், கடலரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவுகளை அரசு அமைந்து கொடுத்துள்ளது, ஆனால் அனைத்து பகுதிகளிலும் இந்த வசதி இல்லை இதனால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது,
இது தொடர்பாக கலெக்டரிடம் பேசிய போது, நாளையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றார். மீனவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்து, தேவைபட்டால் உலக வங்கி நிதி பெற்று போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றார்.