1 வயது பிஞ்சு குழந்தை.. மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்.. கொஞ்சம் உதவுங்களேன்!
சென்னை: வித்தியாசமான ரத்த குறைபாட்டு நோயால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் 1 வயது குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள்.
1 வயதே நிரம்பிய குழந்தைதான் கோகுலஸ்ரீ. பிறந்ததில் இருந்து சுட்டியாக இருந்த கோகுலஸ்ரீ தற்போது உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். Pyruvate Kinase Deficiency எனப்படும் மிக கொடுமையான நோய் இவளை மிக சின்ன வயதிலேயே தாக்கி உள்ளது. இது ரத்த குறைபாட்டு நோயாகும்.
இதனால் கோகுலஸ்ரீ உடனே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போதுதான் உயிருக்கு போராடும் கோகுலஸ்ரீயை காப்பாற்ற முடியும். ஆனால் கோகுலஸ்ரீயின் பெற்றோரிடம் அவளின் அறுவை சிகிச்சைக்கு செலவு செய்ய பணம் இல்லை.
கோகுலஸ்ரீயின் அப்பா பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்க்கிறார். அம்மா வீட்டில் இருக்கிறார். இந்த சிகிச்சை மேற்கொள்ள ரூபாய் 10,00,000 ஆகும். அவ்வளவு பணம் கோகுலஸ்ரீயின் குடும்பத்திடம் இல்லை.
கோகுலஸ்ரீக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கோகுலஸ்ரீ உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் கோகுலஸ்ரீ உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
RECOMMENDED STORIES