ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி 4 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..பூமி பூஜைக்கு பந்தல் அமைத்த போது விபரீதம்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஒசூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை செய்ய பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லை அருகே கர்நாடக மாநிலத்திற்குட்பட்ட அத்திப்பள்ளி என்னும் ஊரில் அடுக்குமாடி கட்டிடப்பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜை நடத்த பந்தல் அமைக்கும் பணியில் நேற்று 20க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

4 killed in lightning strike near Hosur

இன்று நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு நேற்று மாலை பந்தல் அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர்.

பந்தல் மேடைக்கு அருகில் சுற்றுச்சுவர் ஒட்டியவாறு மின்கம்பங்கம் இருப்பதை கவனிக்காமல் பணி செய்தபோது பந்தல் இரும்பு கம்பிகள் மின் வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஆகாஷ்(30), மகாதேவ் (35), விசாகாந்தா(35), விஜய்(30) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் அத்திப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்திப்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பெங்களூரு (Rural) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+