ஓசூர் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. 4 பேர் பலி
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளது.
ஓசூர் அருகே சீதாராம் மேட்டில் இந்த சாலை விபத்து நடந்துள்ளது. மிகவும் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஆம்புலன்சில் இருந்த பயணிகளுக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.

விபத்துக்குள்ளானவர்கள் வேறு ஒரு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காயம் அடைந்த 4 பேரும் பலியாகிவிட்டனர்.
ஆம்புலன்சில் இருந்து நோயாளி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். டீசல் போட நின்ற லாரி மீது அம்புலன்ஸ் மோதியுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications