ஒசூரில் 10 பேருடன் சென்று வேட்புமனு- சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி
ஒசூர்: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி, ஒசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 10 பேருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அன்றே ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, உள்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில் பேருந்து மீது கல்வீசிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஒசூர் எம்எல்ஏ பதவியை இழந்தார். எனவே ஓசூர் தொகுதிக்கும் சேர்த்துதான் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒசூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஒசூர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், தனது கணவரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, பா.ம.க. தொகுதி பொறுப்பாளர் அருண்ராஜன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை ஒசூர் தொகுதி தேர்தல் அலுவலர் விமல்ராஜுவிடம் கடந்த 25ம் தேதி தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆனால் ஒசூர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி மனுதாக்கல் செய்தபோது 10 பேர் உடனிருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் ஜோதி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து ஜோதி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications