150 மாணவிகளுக்கு கட்டாயப்படுத்தி முடிவெட்டிய குருகுல பள்ளி நிர்வாகம்.. காரணம் இதுக்குத்தான்!
ஹைதராபாத்: தண்ணீரை மிச்சப்படுத்துவதற்காக 150 மாணவிகளின் தலைமுடியை வெட்டிய தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி முன்பு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கானாவில் மெதக் என்ற நகரம் உள்ளது. இங்கு அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் பள்ளியிலேயே தங்கி படித்து வருகிறார்கள்.

உணவு இலவசம்
இந்த மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எல்லா இடங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது போல் தெலுங்கானாவில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டது.

தலைமை ஆசிரியர்
ஆழ்குழாய் கிணறு வறண்டுவிட்டதால் 3 நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கு செலவோ அதிகமானது. பள்ளி மாணவிகள் குளிப்பதற்கு அதிக அளவில் தண்ணீரை பயன்படுத்தி வருவதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

கிராப்
மாணவிகளின் தலைமுடி நீளமாக இருப்பதால்தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாக கருதினார். இதையடுத்து அங்கு தங்கியிருந்த 150 மாணவிகளுக்கு தலைமுடியை குட்டையாக வெட்ட உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மாணவிகளுக்கு ஆண்களுக்கு முடி வெட்டுவது போல் கிராப் வெட்டப்பட்டது.

போராட்டம்
இந்த நிலையில் மாணவிகளை சந்திப்பதற்காக பள்ளிக்கு பெற்றோர் சென்றிருந்தனர். அப்போது தங்கள் பெண் குழந்தைகள் முடிவெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
ஹிட்லர் உத்வேகம்... வடக்கிற்கு எதிரான போர்க்கொடி! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சால் புயல் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications