வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா- மத சுதந்திரத்துக்கு எதிரானது.. ஓவைசி ஆவேசம்!
ஹைதராபாத்: இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்க வகை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நலன்கள், சொத்துகளை பராமரிக்கக் கூடிய அமைப்பாக இருப்பது வக்பு வாரியம். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்
2013-ம் ஆண்டு வக்பு வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது வக்பு வாரியத்தின் அதிகாரங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக ஓவைசி கூறுகையில், மத்திய அரசின் இந்த முயற்சி மத சுதந்திரத்தில் தலையிடுவதாகும். பாஜக தமது இந்துத்துவா செயல்திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசு வக்பு சொத்துகளை கையகப்படுத்த முயற்சிக்கிறது. வக்பு வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்க நினைக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு.
மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் மசோதாவில் உள்ள திருத்தங்கள் மூலம், வக்பு வாரியம் உரிமை கோரும் அனைத்து சொத்துகள் மீதும் பரிசீலனை கட்டாயம் என நடைமுறையை உருவாக்க நினைக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. இதனால் தர்காக்களும் மசூதிகளும் இருக்கும் இடங்கள் பிரச்சனைக்குரியதாக மாறக் கூடும் என கூறியுள்ளார் ஓவைசி.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications