இதென்ன கலாட்டா! தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு டிச.9-ல் பதவியேற்குமாம்.. அப்படி என்ன நாள் தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்லுமாம், அப்படி வெல்லும் நிலையில் டிசம்பர் 9-ந் தேதிதான் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்பார் என 'நாள் குறித்து' வைத்திருக்கின்றனராம் காங்கிரஸ் தலைவர்கள்.
2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கை என்பது 60 ஆண்டுகால போராட்டம். இந்தப் போராட்டத்துக்காக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது முதலே அம்மாநிலத்தில் டிஆர்எஸ் அதாவது தற்போதைய பாரத் ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானாவில் 2014 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வென்றது; ஆனால் 2018 தேர்தலில் 19 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. பாஜகவும் கூட 2014-ல் 5 இடங்களையும் 2018-ல் ஒரே ஒரு இடத்தையும்தான் தெலுங்கானாவில் பெற்றது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது.
தெலுங்கானா தேர்தல் 2023: ஆனால் தற்போதைய தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள் வெவ்வேறான முடிவுகளைத் தெரிவித்துள்ளன. பிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்- ஹாட்ரிக் வெற்றியைப் பெறும்; காங்கிரஸ் இம்முறை ஆட்சி அமைத்துவிடும் என்றெல்லாம் இந்த கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜகவுக்கு அதிகபட்சமாக 6 அல்லது 8 இடங்கள்தான் என சிங்கிள் டிஜிட் இடங்களைத்தான் கொடுத்துள்ளன.
என்னது டிச.9-ல் பதவியேற்பா?: இன்று தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு காலை முதலே அமைதியாக நடைபெற்றது. தெலுங்கானாவில் சீரான வாக்குப் பதிவு நடந்தது. இந்த நிலையில் பிஆர்எஸ் செல்வாக்கான தொகுதிகள் பலவற்றில் மந்தமான வாக்குப் பதிவு இருப்பதாக சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் பிஆர்எஸ், பாஜகவினர் மந்தமாக வாக்களிக்கின்றனர்; காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வாக்களிக்கின்றனர் எனவும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த நிலைமை தொடர்ந்தால் டிசம்பர் 9-ந் தேதி தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பார்; ஏனெனில் காங்கிரஸுக்கு டிசம்பர் 9-ந் தேதி மிக முக்கியமான நாள் என்றும் பதிவிட்டுள்ளனர்.
சோனியா காந்தி: தெலுங்கானா தனி மாநிலம் அமைந்த போது "தெலுங்கானா தளி" (தெலுங்கானா தாய்) என போற்றப்பட்டார் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி. அத்துடன் சோனியா காந்தி அம்மன் திருக்கோவில் கூட தெலுங்கானாவில் கட்டப்பட்டது. தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றியதால் சோனியாவை அம்மாநில காங்கிரஸ் கொண்டாடி வருகின்றனர். சோனியா காந்தியின் பிறந்த நாள் டிசம்பர் 9-ந் தேதி என்பதால் அன்றைய தினம்தான் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்பார் எனவும் ரொம்பவே கனவுடன் காத்திருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்!
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா?











Click it and Unblock the Notifications