தெலுங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு... சந்திரசேகர் ராவ் உத்தரவு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன. மார்ச் 24-ம் முதல் நாடு தழுவிய அளவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதனை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்துள்ளன.

பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான முதலமைச்சர்கள் ஊரடங்கை இம்மாத இறுதி வரை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதனிடையே தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஏப்ரல் 30-ம் தேதி வரை தெலுங்கானாவில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் இதுவரை 503 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதில் 393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 93 பேர் கொரோனா தொற்றில் இருந்து நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 14 பேர் கொரோனா பாதிப்பால் தெலுங்கானாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் நோயின் தீவிரம் மேலும் பரவுவதை தடுப்பதற்கு ஊரடங்கு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் சந்திர சேகர் ராவ்.
இதனிடையே நாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என குரல் எழுப்பியவர் சந்திரசேகர் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரமே இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications