இன்ஜினில் தொங்கிய உடல்.. ரயிலில் இருந்து இறங்கிய பைலட்டுக்கு அதிர்ச்சி! உடலில் சொட்டிய ரத்தம்
ஹைதராபாத்: தெலுங்கானா அருகே ரயிலில் இருந்து இறங்கிய இன்ஜின் லோகோ பைலட்டுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் இன்ஜினின் முன்புறம் ஒரு உடல் ரத்தம் சொட்ட சொட்ட தொங்கியபடி கிடந்தது.
இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாநிலங்களையும் இணைக்கும் வகையில் ரயில்கள் இயங்கி வருகின்றன.

தினமும் பல லட்சம் மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய ஊர்கள் முதல் பெரு நகரங்கள் வரை ரயிலில் குறைந்த கட்டணத்தில் சொகுசாக பயணிக்க முடியும். இதனால் ரயிலுக்கான மவுசு மட்டும் தான் குறையவில்லை.
இது ஒருபுறம் இருந்தாலும் அவ்வப்போது ரயில் விபத்துகளும் நடந்து வருகின்றன. மேலும் ரயில் மோதியும் பலர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக தண்டவாளத்தை கடக்க முயலும்போது இத்தகைய உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது தெலுங்கானா மாநிலம் பிபிநகரில் இருந்த காட்கேசார் இடையே ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது பைலட் கீழே இறங்கினார். அப்போது அவர் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரயில் இன்ஜினின் முன்புறம் ஆண் ஒருவரின் உடல் ரத்தம் சொட்ட சொட்ட தொங்கியபடி கிடந்தது. அந்த உடலை பார்த்து திடுக்கிட்டார்.
இதுபற்றி உடனடியாக செகந்திராபாத் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசார் வந்து இன்ஜினின் முன்புறம் தொங்கிய உடலை கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது ரயில் மோதியதும், அப்போது அவரது உடல் இன்ஜின் முன்புறம் சிக்கி சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு தொங்கியபடி வந்ததும் தெரியவந்தது.
மேலும் இறந்த நபர் 65 வயது முதல் 70 வயதுக்குள் இருப்பார் என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் கூட அந்த நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications