பேசிக்கொண்டே இருந்தார்.. திடீர்னு எடுத்து சுட போனதால்.. அலறி போன அதிகாரிகள்.. அதிர வைத்த அமைச்சர்!
அதிகாரிகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மாஜி மந்திரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
ஹைதராபாத்: பேசிக் கொண்டே இருந்தார் மாஜி அமைச்சர்.. திடீரென துப்பாக்கியை எடுத்து அதிகாரிகளை சுட போனார்.. நேருக்கு நேராக துப்பாக்கியை எடுத்து காட்டி மாஜி மந்திரி மிரட்டவும், அதிகாரிகள் எல்லாரும் உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ருமால்டா என்ற கிராமம் உள்ளது.. இங்கு கால்வாய் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், முன்னாள் அமைச்சர் குட்டா மோகன் ரெட்டியின் நிலமும் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீட்டு தொகை அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாஜி அமைச்சர் ரெட்டியின் நிலத்தில் கால்வாய் விரிவாக்க பணிகளை தொடங்குவதற்காக உள்ளூர் காண்ட்ராக்டர் அங்கு சென்றிருக்கிறார்கள்... அவர்களுடன் ஊழியர்களும் சென்றுள்ளனர்.. இதை கேள்விப்பட்டு, அப்போது அங்கு ஆவேசத்துடன் வந்தார் ரெட்டி.
காண்ட்ராக்டர், ஜேசிபி டிரைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. "என்னுடைய நிலம் எப்படி கையகப்படுத்தலாம், எப்படி வேலையை ஆரம்பிப்பீங்க" என்று சரமாரி கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.. அவருக்கு சட்டரீதியான பதில்களை அதிகாரிகளும் எடுத்து விளக்கமாக சொல்லி கொண்டிருந்தனர்.
அப்போதும் ஆத்திரம் அடங்காத மாஜி, திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டி அவர்களை மிரட்டினார். துப்பாக்கியை பார்த்ததும் அதிகாரிகள் மிரண்டு விட்டனர்.. செய்வதறியாது திகைத்தனர்.. இது அத்தனையையும் அங்கிருந்த ஊழியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.. இதை பார்த்ததும், ரெட்டியுடன் வந்திருந்தவர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்.. அதனால் அந்த ஊழியரை அங்கேயே அடித்து துவைத்து எடுத்தனர்.
இதை பார்த்ததும், கான்ட்ராக்டர்கள், என்ஜினியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்த பேரும் உயிரை கையில் பிடித்து தப்பித்து ஓடினர்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. இதையடுத்து, தெலுங்கானா மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாஜி அமைச்சர் மீது புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்... விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications