பேசிக்கொண்டே இருந்தார்.. திடீர்னு எடுத்து சுட போனதால்.. அலறி போன அதிகாரிகள்.. அதிர வைத்த அமைச்சர்!
அதிகாரிகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மாஜி மந்திரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
ஹைதராபாத்: பேசிக் கொண்டே இருந்தார் மாஜி அமைச்சர்.. திடீரென துப்பாக்கியை எடுத்து அதிகாரிகளை சுட போனார்.. நேருக்கு நேராக துப்பாக்கியை எடுத்து காட்டி மாஜி மந்திரி மிரட்டவும், அதிகாரிகள் எல்லாரும் உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ருமால்டா என்ற கிராமம் உள்ளது.. இங்கு கால்வாய் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், முன்னாள் அமைச்சர் குட்டா மோகன் ரெட்டியின் நிலமும் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீட்டு தொகை அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாஜி அமைச்சர் ரெட்டியின் நிலத்தில் கால்வாய் விரிவாக்க பணிகளை தொடங்குவதற்காக உள்ளூர் காண்ட்ராக்டர் அங்கு சென்றிருக்கிறார்கள்... அவர்களுடன் ஊழியர்களும் சென்றுள்ளனர்.. இதை கேள்விப்பட்டு, அப்போது அங்கு ஆவேசத்துடன் வந்தார் ரெட்டி.
காண்ட்ராக்டர், ஜேசிபி டிரைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. "என்னுடைய நிலம் எப்படி கையகப்படுத்தலாம், எப்படி வேலையை ஆரம்பிப்பீங்க" என்று சரமாரி கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.. அவருக்கு சட்டரீதியான பதில்களை அதிகாரிகளும் எடுத்து விளக்கமாக சொல்லி கொண்டிருந்தனர்.
அப்போதும் ஆத்திரம் அடங்காத மாஜி, திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டி அவர்களை மிரட்டினார். துப்பாக்கியை பார்த்ததும் அதிகாரிகள் மிரண்டு விட்டனர்.. செய்வதறியாது திகைத்தனர்.. இது அத்தனையையும் அங்கிருந்த ஊழியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.. இதை பார்த்ததும், ரெட்டியுடன் வந்திருந்தவர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்.. அதனால் அந்த ஊழியரை அங்கேயே அடித்து துவைத்து எடுத்தனர்.
இதை பார்த்ததும், கான்ட்ராக்டர்கள், என்ஜினியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்த பேரும் உயிரை கையில் பிடித்து தப்பித்து ஓடினர்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. இதையடுத்து, தெலுங்கானா மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாஜி அமைச்சர் மீது புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்... விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications