ஆசை ஆசையாக மனைவியை பார்ப்பதற்கு.. அர்த்த ராத்திரியில் கணவன் செய்த வேலை.. அதுக்கு அரசு பஸ்லயா? கடவுளே
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
நள்ளிரவில் பேருந்து சேவை இல்லாததால் தனது மாமியார் வீட்டிலுள்ள மனைவியை காணும் ஆவலில் அரசுப் பேருந்தை திருட்டுத்தனமாக ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாரி டிரைவர்: ஆந்திர பிரதேசத்திலுள்ள நந்தியால் மாவட்டம் வேங்கடபூர் பகுதியை சேர்ந்தவர் துர்க்கையா... இவர் ஒரு லாரி ஓட்டுனர்.. இவருக்கும், இவரது மனைவிக்கும் சமீப காலமாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.
அடிக்கடி தகராறும், சண்டையுமாக இருந்து வந்த நிலையில், ஒருக்கட்டத்தில் வெறுப்படைந்தார் மனைவி.. பிறகு, கணவரிடம் கோபித்து கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். இவரது அம்மா முச்சுமர்ரி பகுதியில் வசித்து வருகிறார்.. லாரி டிரைவரிடம் கோபித்து கொண்டுவந்துவிட்டதால், அம்மாவும், தன் மகளை புண்படுத்தாமல் தன்னுடனேயே தங்கவைத்துள்ளார்.
துர்க்கையா: இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே, மனைவியை காண வேண்டும் என்று துர்க்கையா முடிவு செய்தார்.. ஆனால், நள்ளிரவு நேரம்தான் இப்படியொரு ஐடியா துர்க்கையாவுக்கு தோன்றியிருக்கிறது. அப்படியிருந்தும் நள்ளிரவிலேயே ஆத்மகுரு பஸ் ஸ்டாண்டுக்கு சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது...
விடிகாலையில்தான் ஊருக்கு செல்ல பஸ் கிடைக்கும் என்பதால், உச்சக்கட்ட விரக்தியடைந்தார்.. எனினும் விடிய விடிய பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருந்தார் துர்க்கையா.. அதற்கு மேலும் பொறுமை இல்லாமல், அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு அரசுப்பேருந்தில் ஏறினார்... அதில், டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அந்த பஸ்ஸை ஓட்ட துவங்கினார் துர்க்கையா.
அதிர்ச்சி: அதிகாலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த பணிமனை அதிகாரிகள், டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.. இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு, காணாமல் போன பஸ்ஸை தேட ஆரம்பித்தனர்.
அப்போதுதான், முச்சுமர்ரி பகுதியில் அரசு பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், பஸ்ஸை மீட்டதுடன், திருட்டுத்தனமாக பஸ்ஸை இயக்கிய லாரி ஓட்டுநர் துர்க்கையாவையும் கைது செய்துள்ளனர்.
வாக்குமூலம்: அவரிடம் விசாரணையையும் மேற்கொண்டனர்.. கோபித்து கொண்டு போன மனைவியை காண வேண்டும் என்பதால், திடீரென கிளம்பி செல்லும் சூழல் வந்துவிட்டதாம்.. ஆனால், தன்னிடம் செலவுக்கு பணம் இல்லாததால், மனைவியை காண வேறு வழியில்லாமலும் தான் அரசு பஸ்ஸை இயக்கியதாய் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் துர்க்கையா. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஆந்திராவில் தந்து வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications