தெலுங்கானா: வீடியோ லைக்குகளுக்காக சரக்கு சப்ளை செய்த " பெக் "குமாரை தூக்கியது போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சமூக வலைதளங்களில் தமது வீடியோவை அதிகம் பேர் பார்வையிட வேண்டும் என்பதற்காகவே கூலி தொழிலாளர்களுக்கு சரக்கு விநியோகித்த இளைஞரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    தெலுங்கானாவில் குடிமகன்களின் தாகத்தை ஒரு பெக் மூலம் தீர்த்து வைத்த மிஸ்டர் குமார்- வைரல் வீடியோ

    ஹைதராபாத்தில் கள்ளுக்கடை முன்பாக அமர்ந்திருக்கும் கூலி தொழிலாளர்களுக்கு இளைஞர் ஒருவர் மதுவை விநியோகிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. ஆண், பெண் உட்பட கூலித் தொழிலாளர்களுக்கு ஒரு பெக் அளவு மதுவை அந்த இளைஞர் விநியோகிக்கும் காட்சி அதில் இடம்பெற்றிருந்தது.

    Hyderabad Police arrested Youth for Distributing Free Alcohol

    இது சமூக வலைதளங்களில் வைரலானாது. நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் இளைஞர் ஒருவர் மது விநியோகம் செய்தது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

    இதனையடுத்து போலீசார் மதுவை விநியோகித்த பெக் குமார் மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, சமூக வலைதளங்களில் தமது வீடியோவுக்கு அதிக லைக்குகள் பெற வேண்டும் என விரும்பினேன்.

    அதற்காக யாரும் செய்யாத வகையில் கூலி தொழிலாளர்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து வீடியோ எடுத்து பதிவிட்டேன் என பெக் குமார் கூறியுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+