யாரோ ஏ.ஆர். ரஹ்மான்னு ஒருத்தர் ஆஸ்கர் வாங்கியிருக்காரே!.. அவர் யாரு?.. பாலகிருஷ்ணா திமிர் பேச்சு!
ஹைதராபாத்: ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் யார் என்றே தனக்குத் தெரியாது என தெலுங்கு திரைப்பட நடிகரான பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Recommended Video
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கருதப்படுபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. என்டி ராமாராவின் மகனான பாலகிருஷ்ணாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் அவர் தெலுங்கு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரஹ்மானை இழிவுப்படுத்தி பேசியுள்ளார்.
பாலகிருஷ்ணா
ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கேள்வி எழுப்பிய போது பாலகிருஷ்ணா கூறுகையில், விருதுகள் எப்போதும் என் கால் தூசிக்கு சமம். யாரோ ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் வாங்கியிருக்காராமே. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. பாரத ரத்னா போன்ற விருதுகள் என் தந்தை என்டிஆரின் துண்டுவிரலுக்கு சமம்.
பாடல்கள்
அவர் ஒரு முறை ஆஸ்கர் விருது வாங்கியதெல்லாம் பெரிய விஷயமல்ல. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரது பாடல்கள் ஹிட் அடிக்கின்றன. எந்த ஒரு உயரிய விருதும் எனது குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைகளுக்கு ஈடாகாது.
உயரிய விருது
அதனால் எங்கள் குடும்பத்து முன் இந்த விருதுகள் தான் வெட்கப்பட வேண்டும் என பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஏ. ஆர் ரஹ்மான் மட்டுமல்லாமல் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரான் ஆகியோரையும் அவர் விமர்சித்துள்ளார்.
|
விமர்சனம்
"மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததே எனது தந்தை என்டிஆர்தான். படங்களை எப்போதும் விரைவாக எடுக்க வேண்டும். நான் படங்களை மிகவும் வேகமாக எடுப்பேன். ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரான் போல் ஒரு படத்தை எடுக்க 12 ஆண்டுகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னால் ஒரே நேரத்தில் 3 படங்களில் கூட நடிக்க திறமை இருக்கிறது" என பாலகிருஷ்ணா விமர்சித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.