எதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க!
ஹைதராபாத்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸையும் டிஆர்எஸ் கட்சியையும் தேடி செல்கின்றனர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானாலும் வெளியானது எதிர்க்கட்சிகள் தூக்கத்தை தொலைத்துவிட்டு கதி கலங்கியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர்.

மும்முரம்
மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி 3-ஆவது அணியை அமைத்துவிடக் கூடாது என்பதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்முரம் காட்டி வருகிறார்.

ஆதிக்கம்
இதற்காக அவர் இரவு பகல் பாராது எதிர்க்கட்சியினரை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் ஆந்திரத்தை பொருத்தவரை சட்டசபை தேர்தலிலும் லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெற்றுவிடும் என்றும், அது போல் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் ஆதிக்கமே இருக்கும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்ற இணைந்துள்ள எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு பிறகு தெலுங்கானா முதல்வர் மற்றும் ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை நாடிச் செல்கின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சி
இதனால் கேசிஆர் கட்சிக்கு துணை பிரதமர் பதவி கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. ஒரு பக்கம் ஆந்திர முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் தெலுங்கானா முதல்வரை நோக்கி எதிர்க்கட்சிகள் மொய்த்து செல்வதை பார்த்தோமேயானால் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கு சரிகிறது என்றே கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications