4 மணிநேர திகில் விசாரணை நிறைவு- போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்ட அல்லு அர்ஜூன்
ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு வெளியீட்டு நிகழ்ச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்தது; சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் இன்று ஹைதராபாத் போலீஸ் முன்பாக விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணிநேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர்.
செம்மரக் கட்டை கடத்தலையும் அரசியலையும் மையமாகக் கொண்டதாக புஷ்பா-2 திரைப்படம் அண்மையில் வெளியானது. இத்திரைப்படம் ரூ1500 கோடிக்கும் அதிகமான வசூலைத் தாண்டி இருக்கிறது.

புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு வெளியீட்டு நிகழ்வு கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்; சிறுவன் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இச்சம்பவத்துக்காக நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அல்லு அர்ஜூன் உடனடியாக ஜாமீனில் விடுதலையானார். அப்போது ஒட்டுமொத்த தெலுங்கு திரை உலகமும் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக நின்றது; திரை உலக பிரபலங்கள் வரிசையாக அல்லு அர்ஜூன் வீட்டுக்கே படையெடுத்து சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
இதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தெலுங்கானா சட்டசபையில் அல்லு அர்ஜூனாவை கடுமையாகவும் விமர்சித்தார் ரேவந்த் ரெட்டி. இதற்கு அல்லு அர்ஜூனாவும் பதிலடி தந்திருந்தார். இந்த நிலையில் அல்லு அர்ஜூன் வீடு மீது உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட உடனேயே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அதுவும் சர்ச்சையானது. அதுவும் தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர், முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் இருக்க்ம் போட்டோ வெளியாகி பிரளயத்தை கிளப்பிவிட்டது.
#WATCH | Hyderabad, Telangana: Actor Allu Arjun leaves from his residence in Jubilee Hills
— ANI (@ANI) December 24, 2024
According to Sources, Hyderabad police have issued a notice to actor Allu Arjun, asking him to appear before them in connection with the Sandhya theatre incident pic.twitter.com/S4Y4OcfDWz
தற்போது அடுத்த அத்தியாயமாக, அல்லு அர்ஜூனை இன்று விசாரணைக்கு ஆஜராக பொலீசார் சம்மன் அனுப்பினர். முன்னதாக போலீசார் அறிவுறுத்தலையும் மீறி அல்லு அர்ஜூன் திரையரங்குக்கு சென்றது; ரசிகர் இறந்த பின்னரும் திரையரங்கிலேயே 4 மணிநேரம் இருந்தது உள்ளிட்ட வீடியோ பதிவுகளை ஹைதராபாத் போலீசார் வெளியிட்டிருந்தனர். அல்லு அர்ஜூன், சிறப்பு வெளியீட்டு நிகழ்ச்சி நடந்த திரையரங்க உரிமையாளர் உள்ளிட்டோரும் இன்றைய விசாரணைக்கு ஆஜராகினர். அல்லு அர்ஜூனாவிடம் சுமார் 4 மணிநேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னதாக அல்லு அர்ஜூன் வீட்டில் இருந்து புறப்படும் போது, தம்மை மீண்டும் கைது செய்து சிறையில் அடைப்பார்களோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தியவராக மனைவி மற்றும் குழந்தையிடம் உருக்கமாக பிரியாவிடை பெற்றுக் கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications