குவார்ட்டருக்கு ரூ.30... ஃபுல் பாட்டிலுக்கு ரூ.120? தெலுங்கானா மதுப்பிரியர்களுக்கு வரப்போகும் ஷாக்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்திலும் உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பைக் காரணம் காட்டி வரும் ஜூன் 15 முதல் மதுபான விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஏற்கனவே கர்நாடகாவில் மதுபானம் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது தெலுங்கானா மாநிலத்திலும் விலை உயர போவதாக தெரிகிறது. இது, தென்னிந்திய மது நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், 5 முக்கிய உத்தரவாதத் திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் மதுபானங்கள் மீதான கலால் வரியை அடிக்கடி உயர்த்தி வருகிறது.

மதுபான பாட்டில்கள்
அந்த வகையில், நாட்டில் முதல் முறையாக மதுபான பாட்டில்களில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவை அடிப்படையாகக் கொண்டு புதிய வரி விதிப்பு முறையை அம்மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்து, கடந்த மாதம் அதனை அரசாணையாக வெளியிட்டது.
இதன் மூலம் மதுபானத்தில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்தால் வரியும் அதிகமாக விதிக்கப்படும் என்பதால், சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின் போன்ற இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை குவார்ட்டருக்கு 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கணிசமாக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் மதுபான விலை உயர்த்தப்படுவது இது 5-வது முறை என்பதால் அம்மாநில மதுப்பிரியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தெலுங்கானா குவார்ட்டர் பாட்டில் விலை
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அம்மாநில மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்த பல்வேறு முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாகவே அந்த மாநில அரசுக்கு தொடர்ந்து கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வந்தன.
மதுபானம் தயாரிப்பதற்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலையானது சந்தையில் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக, மதுபானங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
செலவை சமாளிக்க முடியல
இத்தகைய கடுமையான மூலப்பொருள் விலை ஏற்றம் மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் தங்களுக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க, மதுபானங்களின் விலையை உயர்த்தியே தீர வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் அம்மாநில அரசிடம் பிடிவாதமாகக் கோரிக்கை விடுத்தனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை ஆழமாகப் பரிசீலித்த தெலுங்கானா மாநில அரசு, இறுதியாக தயாரிப்பாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, வரும் 15ம் தேதி முதல் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாம்.
பாட்டிலுக்கு எவ்வளவு விலை
அரசு இந்த விலை உயர்வு முடிவை உறுதி செய்திருந்தாலும், ஒரு குறிப்பிட்ட மதுபான பாட்டிலுக்கு எவ்வளவு ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என்ற துல்லியமான விவரங்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், எக்சைஸ் துறை வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, ஒரு குவார்ட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், ஒரு முழு பாட்டிலுக்கு 120 ரூபாய் வரையிலும் விலை அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிராண்டு வாரியாகவும், பாட்டில்களின் கொள்ளளவு வாரியாகவும் எவ்வளவு கட்டணம் அதிகரிக்கப்படும் என்ற விரிவான பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு அறிவிப்பானது தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மது நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications