Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“வெறும் 2% ஓட்டுதான்’’.. இத வச்சுகிட்டு எப்படி தெலங்கானாவில்.. மேடையிலேயே பாஜகவை கலாய்த்த ராகுல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் இம்மாதம் 30ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "பாஜகவுக்கு தெலங்கானாவில் வெறும் 2% வாக்குகள்தான் கிடைக்கும்" என விமர்சித்துள்ளார்.

தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இந்த கட்சி 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரசும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆனால் பாஜக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இதுவரை 6,000 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாகவும், இதனை ஷார்ட் லிஸ்ட் செய்வே தாமதம் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர்களை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்படும் என கூறிய பாஜக கடந்த 22ம் தேதி 52 பெயர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

Rahul Gandhi comments that BJP will get only 2% votes in Telangana

தெலங்கானா பாஜகவின் மாநில பொது செயலாளர் பண்டி சஞ்சய், கரீம்நகரில் போட்டியிடுகிறார். பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் இம்முறை கஜ்வேல் தொகுதியில் சந்திரசேகர ராவுடன் நேரடியாக மோதுகிறார். குறிப்பாக கோஷாமஹால் தொகுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜகஎம்.எல்.ஏ.ராஜாசிங்குக்கு மறுபடியும் இதே தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் ஒதுக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இப்படி இருக்கையில் தேர்தல் பிரசாரத்தையும் பாஜக வீரியமாக மேற்கொண்டிருக்கிறது. கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி தெலங்கானவுக்கு நேரடியாக விசிட் செய்து பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து கடந்த 27ம் தேதியன்று தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, "தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது மகன் கே.டி.ராமா ராவ்வை முதல்வராக நினைக்கிறார். சோனியா அவரது மகன் ராகுலை பிரதமராக நினைக்கிறார். ஆனால் பாஜக வெற்றிபெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்வராக நியமிப்போம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். இன்று தெலங்கானாவின் கல்வகுர்த்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்று பேசிய அவர், "பாஜக தலைவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவெனில் பாஜகவின் நான்கு டயர்களையும் காங்கிரஸ் இங்கு பஞ்சராக்கியுள்ளது. தெலங்கானாவில் நீங்கள் வெறும் 2% ஓட்டுகளைதான் பெறுவீர்கள். அப்படி இருக்கும்போது உங்களால் எப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களை முதல்வராக்க முடியும்?

அதிலும் பிரதமர் மோடி இருக்கிறாரே, அவர் அமெரிக்கா சென்று அங்கு ஓபிசி வகுப்பை சேர்ந்தவரை அதிபராக்குவேன் என்று கூட கூறுவார். இந்த மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சியும், பாஜகவும் ரகசிய உடன்படிக்கையில் இருக்கின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. என் மீது கூட 24 வழக்குகள் இருக்கின்றன. என்னுடைய எம்பி பதவி பறிப்பு, அரசு வீடு பறிப்பு கூட பாஜகவால்தான் நடந்தது" என்று குற்றம்சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+