தெலுங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தீயை அணைக்க பல மணிநேரம் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டுன்டிகல் பகுதியில் இருக்கும் விமானப்படை தளம் அருகே ஏற்பட்ட இந்த தீயால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Recommended Video

    Exclusive: Nithyananda Kailasa - அம்பலமாகும் ரகசியங்கள் | Oneindia Tamil

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த சங்காரெட்டி மாவட்டத்தின் போந்தப்பள்ளி தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த டிரம்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்த காரணத்தால் தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.

    Telangana: Massive blaze at polymer unit warehouse in Sangareddy, no injuries

    தீயை அணைக்க டுன்டிகல் விமானப்படை தளத்தைச் சேர்ந்த இரண்டு வாகனங்கள் உட்பட ஏழு தீயணைப்பு வாகனங்கள், தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தன. கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தால்யாரும் இறக்கவில்லை. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Telangana: Massive blaze at polymer unit warehouse in Sangareddy, no injuries

    முன்னதாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி, தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின்சார நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஒன்பது பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலோர் பொறியியலாளர்கள் ஆவர். இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+