32,574 வாக்குச்சாவடிகள்.. மூன்றரை கோடி வாக்காளர்கள்.. நாளைய வாக்குப்பதிவுக்கு தெலுங்கானா ரெடி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தெலுங்கானாவில் தற்போது, சந்திரசேகரராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Telangana will face single assembly poll on Friday

ஆந்திராவுடனான பிரிவுக்கு பிறகு இதன் தலைநகரமாக ஹைதராபாத் நீடிக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 31 மாவட்டங்கள் உள்ளன. மொத்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 119 ஆகும். தெலுங்கானா மக்கள் தொகை 3.50 கோடியாகும்.

இதில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை 1.36 கோடியாகும். கிராமப்புறங்களில் 2.13 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 2018-19ம் நிதியாண்டில் இம்மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ரூ. 8.43 லட்சம் கோடியாகும்.

தெலுங்கானாவில் 66.54 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். 1000 ஆண்களுக்கு 988 பெண்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 2,61,36,776 கோடியாகும். மொத்த வாக்குப்பதிவு மையங்கள், 32,574.

2014ல் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி 63 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும், தெலுங்கு தேசம் 15 தொகுதிகளையும் வென்றது. AIMIM கட்சி 7 தொகுதிகளையும், பாஜக 5 தொகுதிகளையும் வென்றன. பிறர் 8 தொகுதிகளை கைப்பற்றினர். இங்கு 88 பொதுத்தொகுதிகளாகும். 19 தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதி. பழங்குடியினருக்காக 12 தொகுதிகள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+