தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்.. காலமானார் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையும் மூத்த நடிகருமான கிருஷ்ணா இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் மகேஷ் பாபு.
இவரது தந்தை கிருஷ்ணா பல்வேறு மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தவர்.
ஷியாம் சரண்: இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு எல்லா தேர்தல்களிலும் வாக்களித்தவர் காலமானார்
காங்கிரஸ் எம்பி
பத்ம பூஷன் விருது பெற்ற இவர், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1989 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் வந்த அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த கிருஷ்ணா
வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் கிருஷ்ணாவை அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்தனர். சுயநினைவின்றி இருந்த நடிகர் கிருஷ்ணாவுக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை
இதனை தொடர்ந்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் மருத்துவமனையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவர்கள் உயர்ரக தீவிர சிகிச்சைகளை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியானது.
உடல்நிலை மோசம்
நடிகர் கிருஷ்ணாவை பரிசோதித்த மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், நடிகர் கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தது. அவருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மறைந்தார் நடிகர் கிருஷ்ணா
இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா, இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு தெலுங்கு சினிமா ரசிகர்கள், திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.