இதயத்தையே நொறுங்க வைத்த ஹைதராபாத் விபத்து.. வாக்கிங் போனவர்கள் மீது ஷாக்.. சிசிடிவி காட்சி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பந்த்லகுடாவில் காலை வாக்கிங் சென்றவர்கள் மீது அசுர வேகத்தில் வந்த கார் மோதியதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். ஜூலை 4ஆம் தேதியான இன்று இந்த கொடூரமான விபத்து நடந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சியை பார்த்து பலரும் மிரண்டு போய் உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சன்சிட்டி பந்த்லகுடாவில் இன்று காலை சிலர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். அப்படி காலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த தாய், குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட 7 பேரின் பின்னால் அசுர வேகத்தில் வந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்தனர். இதேபோல் வாக்கிங் சென்று கொண்டிருந்த மற்றுமொரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கோர விபத்தில்3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இரக்கம் இல்லாத டிரைவர்: ஆனால் ஈவு இரக்கமே இல்லாமல் இந்த கோர விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், காரை விட்டு இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஹைதராபாத் நகர போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் உஸ்மானியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர் .
நேரில் பார்த்தவர்கள் சாட்சி: இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் கூறுகையில், கார் அதிவேகத்தில் சென்றது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது பயங்கர வேகத்தில் மோதியது என்றார்கள்.
బండ్లగూడ సన్ సిటీ వద్ద ఘోర రోడ్ ప్రమాదం
— Telugu Scribe (@TeluguScribe) July 4, 2023
మార్నింగ్ వాక్కు వచ్చిన ఇద్దరు మహిళలు, చిన్నారి మృతి. అతి వేగంగా వెళ్తున్న హోండా స్పోర్ట్స్ కారు ఓవర్ స్పీడుతో అదుపుతప్పడంతో ఢీ కొని ముగ్గురు మృతి. pic.twitter.com/6nYd2TIzWj
சிசிடிவி காட்சி: இந்நிலையில் இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வளைவில் வேகமாக வந்த ஹோண்டா ஸ்போர்ட்ஸ் கார், திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்தது. அப்படியே அசுர வேகத்தில் தாறுமாறாக சென்று அந்த கார் பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் அடுத்த சில நொடிகளிலேயே உயிரிழந்தனர். மோசமான இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பார்ப்போரை நடுங்க வைத்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications