6 மாதத்தில் இருந்து 1 வருடத்துக்குள் ஆந்திராவையே மாற்றுவேன்.. ஜெகன் மோகன் ரெட்டி உறுதி!
ஹைதராபாத்: 6 மாதத்தில் இருந்து ஓராண்டுக்குள் ஆந்திராவையே மாற்றிக்காட்டுவேன் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இரு தேர்தல்களிலுமே முன்னிலை பெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

25லும் அவுட்
பிற்பகல் வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 24 இடங்களிலும் சந்திரபாபு நாயுடுவின் டிடிபி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வந்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு அந்த ஒரு இடமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வசம் சென்றது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதியிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது.

145 இடங்களில் முன்னிலை
இதேபோல் 175 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 145 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 29 சட்டப்பேரவை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஒய்எஸ்ஆர் காங். வெற்றி
ஜன சேனா கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. 145 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதால் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

முதல்வராக பதவியேற்பு
ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30ஆம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினமே அவரது அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

ஜெகன் நன்றி
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஆந்திராவையே மாற்றுவோம்
மேலும் ஆந்திராவில் 6 மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாங்கள் பெற்ற வெற்றி மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications