Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாரான்.. வாரான்.. வரான்லே.. தாமிரபரணி விஷாலாக தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் இன்ஜினியர்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தெலுங்கானா மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. இதுபற்றி அறிந்த ரயில்வே ஊழியர்கள், போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த பெண் காரை நிறுத்தாமல் தண்டவாளத்தில் ஓட்டி சென்றார். இறுதியில் அந்த பெண்ணை அந்த பகுதி மக்களின் உதவியுடன் போலீசார் பிடித்தனர்.

தமிழில் வெளியான ‛தாமிரபரணி' திரைப்படத்தில் நடிகர் விஷால் ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டி செல்வார். திரைப்படத்தில் விஷாலின் ‛இன்ட்ரோ' சீன் ஆக அது இடம்பெற்றிருக்கும்.

telangana car

தற்போது நடிகர் விஷால் பாணியில் இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் கார் ஓட்டி சென்றுள்ளார். அந்த பெண் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கொண்டக்கால் பகுதியில் ரயில் தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தில் ஏராளமான ரயில்கள் தினமும் சென்று வருகின்றன. பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் இந்த தண்டவாளத்தில் பயணித்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று காலையில் கொண்டக்கால் ரயில்வே கிராசிங்கில் நின்ற கார் திடீரென்று தண்டவாளத்தை நோக்கி சென்றது.
அதன்பிறகு அந்த கார் தண்டவாளத்திலேயே பயணிக்க தொடங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உடனடியாக ரயில் அதிகாரிகள், ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்டவாளத்தில் சென்ற கார் நாகுலபள்ளி அருகே சென்றது. அப்போது அங்கிருந்த மக்கள் காரை வழிமறிக்க முயன்றனர். ஆனால் காரை ஓட்டி சென்றவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து அவர் காரை ஓட்டி சென்றனர்.

இவர் கொண்டக்கால் பகுதியில் இருந்து நார்சிங்கி வரை 7 கிலோமீட்டர் தூரம் கார் சென்றது. நகுலபள்ளி மற்றும் சங்கரபள்ளி இடையே அந்த பகுதி மக்கள், ரயில்வே ஊழியர்கள், போலீசார் இணைந்து அந்த காரை நிறுத்தினர். அப்போது தான் காரை ஓட்டி சென்றது ஒரு பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் கைகளை சிலர் கட்டினர். பிறகு கார் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

பிடிபட்ட இளம்பெண்ணை ரயில்வே போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரவிகா சோனி என்பதும் அவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியதும், சமீபத்தில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

பணியை இழந்த ரவீகா சோனி மனஉளைச்சலுக்கு ஆளான நிலையில் அவர் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் வீடியோ பதிவிடுவதற்காக அவர் தண்டவாளத்தில் கார் ஓட்டி சென்றாரா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரவீகா சோனுவின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+