போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருக்கிறேன்.. திவாகரன் திடீர் விளக்கம்!

போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெயலலிதாவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள் - கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன்?

    மன்னார்குடி போயஸ் கார்டனில் இருந்து விலகியே இருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நேற்று நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்பத்தினர் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சசிகலா குடும்பத்தினர் போயஸ் கார்டனில் தங்கியிருந்ததே இந்த ரெய்டுக்கு காரணம் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். சசிகலா குடும்பத்தினர் தான் ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

    கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை

    கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை

    இந்நிலையில் சசிகலாவின் சகோதரரான திவாகரன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்கிறார்கள், சோதனை குறித்து கருத்துச்சொல்ல ஒன்றுமில்லை என்றார்.

    நிறைய மாற்றங்கள் ஏற்படும்

    நிறைய மாற்றங்கள் ஏற்படும்

    மேலும் வருமான வரித்துறை சோதனையில் யாரும் தலையிட முடியாது என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா வீட்டில் வருமான வரிச்சோதனை நடைபெற்றதை அடுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்றும் திவாகரன் தெரிவித்தார்.

    கார்டனிலிருந்து விலகியே இருக்கிறேன்

    கார்டனிலிருந்து விலகியே இருக்கிறேன்

    ஜெயலலிதா வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் கைப்பற்றப்பட்டது பற்றி தனக்கு தெரியாது என்றும் திவாகரன் கூறினார். தமது வீட்டில் இருந்து லேப்டாப், பென்டிரைவ் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். போயஸ் கார்டனில் இருந்து தான் விலகியே இருப்பதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

    பிரச்சனை வரும் என்பதற்காகவே

    பிரச்சனை வரும் என்பதற்காகவே

    மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது சசிகலாவை வீடியோ எடுக்கசொன்னது ஜெயலலிதாதான் என்றும் அவர் கூறினார். பின்னாளில் ஏதாவது பிரச்சனை வரும் என்பதற்காகவே ஜெயலலிதா, சசிகலாவை வீடியோ எடுக்க கூறினார் என்றும் திவாகரன் தெரிவித்தார்.

    விசாரணை வளையத்தில் தான்

    விசாரணை வளையத்தில் தான்

    பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லும் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்றும் அவர் கூறினார். 1996 இல் இருந்தே சசிகலா விசாரணை வளையத்தில் தான் இருக்கிறார் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+