காவிரியிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. ஒக்கேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால், ஒக்கேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடியை தாண்டியுள்ளது. இன்னு சில மணி நேரத்தில் 90 அடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

1,00,000 cubic feet of water released in Cauvery: Flood warning in Hogenakkal area

கபினியிலுருந்து 40,416 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 56,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.மொத்தமாக காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது.விரைவில் மேட்டூர் அணை 90 அடியை எட்டும் என கூறப்படுகிறது. அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒக்கேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் மலர்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+