தூக்கு,விஷம்,தீக்குளிப்பு… 2013ல் 1.34 லட்சம் இந்தியர்கள் தற்கொலை
டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 2013ஆம் ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இறந்து போனதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி இதனை தெரிவித்தார்.இதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், அதற்கடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளன.

மகாராஷ்டிரா-தமிழ்நாடு
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 16 ஆயிரத்து 662 பேரும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 601 பேரும் தற்கொலை முடிவை தேடிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரா – மேற்கு வங்காளம்
ஆந்திர மாநிலத்தில் 14 ஆயிரத்து 607 பேரும், மேற்கு வங்காளத்தில் 13 ஆயிரத்து 55 பேரும், கர்நாடகத்தில் 11 ஆயிரத்து 266 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கேரளாவில் 8,646 பேர்
மத்தியப்பிரதேசத்தில் 9 ஆயிரத்து 446 பேரும், கேரளாவில் 8 ஆயிரத்து 646 பேரும் பலியாகியுள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை எண்ணிக்கை
கடந்த 2011ஆம் ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேரும், 2012ல் 1 லட்சத்து 35 ஆயிரத்து 445 பேரும், 2013-ல் 1 லட்சத்து 34 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications